மரக்கறி விலைப்பட்டியல் (26.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
மரக்கறி விலைப்பட்டியல் (26.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
“இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மக்களை வாழ வைப்பதுதான் ஓர் அரசின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், உயிரிழப்புகளும் காயங்களுக்குள்ளான சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.
பொதுமக்கள் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் மீது அவரது அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் சாதாரண பிரஜைகளின் உயிருக்கு எவ்வாறு உத்தரவாதமளிக்க முடியும்?
இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் வெகுவாகவும் சர்வசாதாரணமாகவும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசிடம் சரியான வேலைத்திட்டமொன்று இல்லை. இந்த அரசின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தான் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வெலிகம பிரதேச சபை தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸார் அதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இன்று நாட்டில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், கொலைகாரர்களையும் கைது செய்து, குற்றச் செயல்களை இல்லாதொழிக்க வேண்டும். அற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
அவர்களுக்குச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கும் நடவடிக்கைக்கு நாமும் எமது ஆதரவைத் தருவோம். இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சியைக் கட்டுப்படுத்த வந்தால், அதற்கு நாம் இடமளியோம்.
இன்று நாட்டில் ஜனநாயகமோ – அமைதியோ இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாட்டை அழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
நீதி, நியாயம், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் எமது உட்சபட்ச ஒத்துழைப்பைத் தருவோம். மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்குமாறும், 220 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கிற்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் சந்தித்து பேச்சு நடத்தியபோhதே மேற்படி அழைப்பை விடுத்தார்.
இதன்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அங்கு கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய சீனா நிறுவப்பட்ட பின்னர், நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட உறுதிப்பாடு மற்றும் பணியக விவகாரங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதன் மூலம், நிலையான நிர்வாகத்தைப் பேணுதல், முற்போக்கான எதிர் சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்புக் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி, ஒழுக்கத்தைப் பேணுவதன் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
சமூக நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் வலியுறுத்தியுள்ளார்.
ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டை செயற்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
[09:50, 10/25/2025] Sanath: வடக்கு முதல்வர் விவகாரம்: ஸ்ரீதரன், சுமந்திரனை இணைக்க தீவிர முயற்சி!
அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பெரும் தூண்களான ஸ்ரீதரனையும், சுமந்திரனையும் சமரசப்படுத்துவதற்குரிய முயற்சியில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி வெற்றிநடை போட வேண்டுமெனில் இரு தரப்பினரும் அரசியல் முரண்பாடுகளை களைந்து, ஓரணியில் திரள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு முதல்வர் வேட்பாளராக சிறிதரனை களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சி பரிசீலித்துவருகின்றது.
இதற்காக எம்.பி. பதவியை அவர் துறந்த பின்னர் யாழ்.மாவட்டத்தில் அடுத்த இடத்தில் இருக்கும் எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றம் செல்வார்.
இத்திட்டத்துக்கு சுமந்திரன் தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளபோதிலும், ஸ்ரீதரன் தரப்பு நிபந்தனையொன்றை விதித்துள்ளது என அறியமுடிகின்றது.
இத்திட்டம் அமுலாக வேண்டுமெனில் தமிழரசுக் கட்சியின் தலைவராக தன்னை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும், தலைமைப்பதவி தொடர்பில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீளப்பெறப்படவேண்டும் எனவும் சுமந்திரன் தரப்புக்கு, ஸ்ரீதரன் தரப்பு நிபந்தனை முன்வைத்துள்ளது.
அதேவேளை, சுமந்திரன் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினால்கூட ஸ்ரீதரனின் பகிரங்க ஆதரவு இல்லாமல் அவரால் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியமில்லை எனவும் கூறப்படுகின்றது. எனவே, முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதாக இருந்தால்கூட ஸ்ரீதரன் தரப்பின் நிபந்தனையை, சுமந்திரன் அணி ஏற்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி முடிவொன்றை எடுக்க வைப்பதற்குரிய முயற்சியில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இது இன்று மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழ் அமுக்கமாக மேற்கு – வடமேற்குத் திசையை அண்மித்து நகர்ந்து செல்வதுடன் நாளையளவில் சூறாவளியாக மாற்றமடையும். நாளை மறுதினம் காலையளவில் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்திய மற்றும் தென்மேற்குத் திசையுடன் இணைந்த இடத்தில் மிகவும் பலமிக்க சூறாவளியாக வலுவடையும்.
இதன் பிற்பாடு வடக்கு – வடமேற்குத் திசையினுடாக நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு தாய்லாந்து நாட்டினால் முன் மொழியப்பட்ட “மொன்தா” எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 579 குடும்பங்களைச் சேர்ந்த 22, 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 697 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் எம்.பிக்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர்.
நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், , யோகேஸ்வரன் உட்பட மேலும் பல முன்னாள் எம்.பிக்களே போட்டியிடுவது பற்றி ஆராய்ந்துவருகின்றனர்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் வடக்கிலுள்ள முன்னாள் எம்.பிக்களும் போட்டியிடவுள்ளனர். குறிப்பாக கட்சி தீர்மானிக்குமானால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக சில எம்.பிக்கள் பதவி விலகவுள்ளனர். மலையகத்திலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகவர்களும் தேர்தலில் குதிக்கவுள்ளனர்.
“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவது நல்லது. அவ்வாறு ஒன்றிணைந்தால் அது நாட்டின் அரசியலுக்கு நல்லது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதே நான் கூறி இருந்தேன். அவர்கள் ஒருமித்த கொள்கையை கொண்ட கட்சிகளில் இருக்கின்றனர்.
அரசியல் ரீதியில் இணைவதற்கு எவ்வித தடையும் இல்லை. அவ்வாறு இணைவது நல்லது.
இந்த இணைவானது எமக்கு சவாலாக அமையாது. எமது கட்சியின் பயணம், எமது முகாமை சேர்ந்தவர்களுடன் தொடரும்.” – என்றார் நாமல்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ளவர்கள் பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றன.
எனவே, பொதுவேலைத்திட்டத்தின்கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்றுவருகின்றது.
அத்துடன், இருவரும் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
ஒரு கட்சிகளும் ஒரு கட்சியாக இணைவதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணைந்து, பொது சின்னத்தில் – பொதுபட்டியலின்கீழ் தேர்தல்களை சந்திப்பது பற்றி தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 579 குடும்பங்களைச் சேர்ந்த 22, 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 697 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கட்டாயம் கீழே போட வேண்டும். இனி அவர்களால் காசாவை நிர்வகிக்கவே முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்.
இஸ்ரேல் சென்றுள்ள அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“ ஹமாஸ் தொடர்ந்த அச்சுறுத்தி வந்தால், அவர்களுக்கு எதிராக மீண்டும் போர் தொடங்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுமா என்பதை இப்போது கூற முடியாது.
அதே நேரத்தில் அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்திற்கு பிராந்திய அளவில் ஆதரவு இருக்கிறது. இந்த திட்டம் சிறந்த ஒன்று. டிரம்புக்கு வேறு மாற்றுத்திட்டம் இல்லை.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகள் தான் வகுக்க வேண்டும். இதில் ஹமாசை சேர்க்க முடியாது.
ராணுவமயமாக்கலை ஹமாஸ் மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறுவதாகும். எனவே அது அமுல்படுத்தப்பட வேண்டும். இது ஒரு ஒப்பந்தம், அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இஸ்ரேல் உறுதிமொழிகளை அளித்துள்ளது.
காசா மக்கள் ஹமாஸ் இயக்கத்தால் அச்சப்படாமல் இருக்க, அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற நாங்கள் உதவ விரும்புகிறோம். எனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறி விலைப்பட்டியல் (25.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…