எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமை மற்றும் நாடாளுமன்ற பொறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்துரலியே ரத்தன தேரர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.
522,789 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.
விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரான பொறியியலாளர் கைது!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் ஒன்பது மாத மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மென் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுக்களால் தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
எனினும், விராட் கோலி இதனைக் கண்டித்து மொஹமட் ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் நபரொருவர் கோலியின் 09 மாத குழந்தைக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
இதனையடுத்து, இது தொ்டர்பில் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிசறை விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மேலுமொருவர் உயிரிழப்பு
வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 சிறுவன் உயிரிழந்துள்ளாா்.
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வருடம் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.
16 வயது சிறுவனால் ஓட்ப்பட்ட கார் ஒன்று வெலிசறை பிரதேசத்தில் மேலும்சில வாகனங்களுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்த விபத்தின்போது, மோட்டாா் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பாடசாலை மாணவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளாா். உயிரிழந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சிசென்ற அவரின் உறவினரான 52 வயது நபர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோா் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
மஹபாகே பிரதேசத்திலுள்ள தங்க ஆபரண வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான குறித்த அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அவரின் மகனே இந்த காரை ஓட்டியுள்ளாா்.
தலைமுடி அடர்த்தியாக வளர வெங்காய ஹேர் பெக் !
தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.
வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும் மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.
வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை: வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும். வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும். வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம். வெங்காய சாறுடன் வேறு சில பொருட்களை சேர்த்தும் வலுவான மற்றும் பொலிவான கூந்தலை பெறலாம்.
வெங்காய சாறுடன் தேன்
கால் கப் வெங்காய சாற்றை எடுத்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனை இந்த சாறுடன் கலக்கவும். இந்த சாறை எடுத்து தலையிலும் வேர்கால்களிலும் நன்றாக தடவவும். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் தலை முடி மசாஜிற்கு ஏற்ற ஒரு பொருளாகும். இந்த எண்ணெய் தலைக்குள் ஊடுருவி தலை முடிக்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. பொடுகை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு. 3 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றை எடுத்துக் கொள்ளவும். ஒன்றரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை இதனுடன் கலக்கவும். தலையில் நன்றாக இந்த சாறை தடவி மசாஜ் செய்யவும். 2 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும். இதனை தொடர்ந்து செய்வதால் வலிமையான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.
வெங்காய சாறுடன் கறிவேப்பிலை
முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையின் பயன் மிகவும் அதிகம். முடி வளர்ச்சியை அதிகரித்து , வலுவான மற்றும் கருமையான முடியை தருகிறது. ஒரு கை கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். இரன்டு டேபிள் ஸ்பூன் வெங்காய சாறுடன் இந்த பேஸ்டை கலக்கவும். இந்த பேஸ்டை தலையில் தடவி 1மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஷாம்பூவால் தலையை அலசவும்.
வெங்காய சாற்றை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவை
வெங்காய சாறை தயாரித்த பிறகு நன்றாக வடிகட்டி பயன்படுத்தவும். வெங்காய துகள்கள் தலையில் ஒட்டி கொண்டால் எடுப்பது சிரமமாக இருக்கும். வெங்காய சாறு பயன்படுத்தும்போது மென்மையான ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகர், பூண்டு போன்றவற்றையும் இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம். வெங்காயத்தின் வாசனை பிடிக்காதவர்கள் இதனுடன் வேறு எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய அளவு பயன்படுத்தி ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.
கொவிட் தொற்று உறுதியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொவிட் தொற்று உறுதியாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை உயர்வடைவதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது நாட்டின் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.
இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில் படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் – சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
20 ஆல் ஜனநாயகம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது – கரு சீற்றம்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தால் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமும் தபாலகமாக மாற்றப்பட்டுள்ளது – என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தால் எதிர்ப்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும்கூட 20 ஐ வைத்துக்கொண்டு பொருட்களின் விலையைக்கூட கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமையே காணப்படுகின்றது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவராமல் இருந்திருக்கலாம் என்பதே எனது கருத்து. அதன்மூலம் ஜனநாயகம் இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
20 ஆல் நாடாளுமன்றம் தபாலகம்போல் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமும் முழுமையானது என நான் கூறமாட்டேன். எனினும், அதன் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய பயங்கரமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டு, உயர் பதவிகளுக்கான நியமனங்கள் உரிய வகையில் இடம்பெற்றன. ” – என்றார்.
கினிகத்தேனையில் கோர விபத்து – ஒருவர் பலி! இருவர் காயம்!! (படங்கள்)
கினிகத்தேனை – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.
நாவலப்பிட்டியவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கனரக வாகனமும், ஹட்டனிலிருந்து இருந்து நாவலப்பிட்டி கு சென்ற இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, பஸ்ஸின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் கினிகத்தேனை – கண்டி வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
பஹல கடுகன்னாவ பகுதி வாகன போக்குவரத்துக்காக திறப்பு
மண்சரிவு அவதானம் காரணமாக நேற்றைய தினம் (10) மூடப்பட்ட கொழும்பு கண்டி வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று மதியம் 1 மணி முதல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது.
எனினும், குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.