Home Blog Page 2682

15 துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமை, தொழில்சார் பட்டப்படிப்பு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை, சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சம்பள கொடுப்பனவுகள், சீருடை கொடுப்பனவுகள், சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான இடமாற்ற முறைமை வகுக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். , கேகாலை, அம்பாறை பொது வைத்தியசாலைகள் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் கோவிலில் நடப்பது என்ன? ரூ 5 கோடி பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயம்!

கதிர்காமம் கோவிலுக்கு வழங்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவராலேயே குறித்த மாணிக்கக்கல், கோவிலுக்கு பூஜை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, கதிர்காமம் கோவிலுக்கு பாதாள குழு உறுப்பினர் அங்காட லொக்கா தரப்பால் வழங்கப்பட்டிருந்த 38 பவுண், தங்க தகடொன்றும் அண்மையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்புடன் பட்ஜட் கூட்டத்தொடர் 12 இல் ஆரம்பம்!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் 12 ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூட இருப்பதோடு சனிக்கிழமைகளிலும் நாடாளுமன்றம் கூட உள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறும்.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக இம்முறை வரவு செலவுத்திட்ட விவாதம் சைகை மொழியிலும் இடம்பெற உள்ளது விசேட அம்சமாகும்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தில் விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதோடு ஏனைய தினங்களிலும் விசேட ஒழுங்குள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக 2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. 2 வருடங்களின் பின்னரே இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது

70,633 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் ஏழாம் திகதி வரை பல்வேறு நாடுகளிலிருந்தும் 70,633 உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 13,547 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் ஒக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 22,771 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்றுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில் 9,454 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாகவும் இக்காலங்களில் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, ஜேர்மன், கனடா, பிரான்ஸ், பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்தே இக்காலங்களில் அதிகளவு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரை 70,633 உல்லாசப் பிரயாணிகள் நாட்டு வருகை தந்துள்ளதாகவும் தொடர்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் பலி!

கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட ரம்புக்கனை , தொம்பேமட பகுதியில ஏற்பட்ட மண்சரிவினால் நால்வர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீடொன்றின்மீதே மண்மேடு இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது எனவும், இதனால் வீட்டுக்குள் இருந்த நால்வரும் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்றது. கேகாலை உட்பட மேலும் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, மாத்தளை, பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், காலி, மாத்றை, இரத்தினபுரி, குருணாகல், புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே சீரற்ற காலநிலை நிலவுகின்றது.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 89 வீடுகள் பகுதியவும் சேதமடைந்துள்ளன.

மாத்தறையில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாத்தறை, பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நமுனுகுலவத்தைப் பகுதியில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பிட்டபெத்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நமுனுகுலவத்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நடமாடும் சுற்றுலாப் பொலிஸார் இன்று சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் குறித்த நபரின் சடலம் கிடப்பதைப் பொலிஸார் கண்டுள்ளனர்.

இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பசறையில் கோவில் உடைக்கப்பட்டு முருகன் சிலை கொள்ளை!

பசறை, கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள 50 வருடங்கள் பழமைவாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயம் உடைக்கப்பட்டு, உலோகத்திலான முருகப்பெருமானின் சிலை களவாடப்பட்டுள்ளது.

இன்று மாலை வேளையில் கோயில் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை அறிந்த தோட்ட மக்கள் பசறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த முருகப்பெருமான் வள்ளி சமேதராய் எழுந்தருளி சிலை ஆலயத்தில் காணாமல் போயுள்ளமைத் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிருபர் – நடராஜா மலர்வேந்தன்

‘கோட்டா அரசை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒன்றிணையுங்கள்’

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ‘ஊரிலிருந்து தொடங்குவோம்’ என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்த ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி சேதன விவசாயத்தை வலுக்கட்டாயமாகத் தான் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அராஜகம் காணப்படுகின்றது.

இந்த நாட்டில் தற்போது பால்மா, எரிவாயு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் இந்தக்  கோட்டாபய அரசானது தனது குடும்ப ஆட்சியை மென்மேலும் அதிகரித்து இந்த நாட்டில் அராஜகம் புரிந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது .

நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில் ஒரு நெற்கதிர் என்றால் என்னவென்று தெரியாத ஜனாதிபதி தான் தற்போது விவசாயப் புரட்சி ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

விவசாயப் பெருமக்களுடன் கலந்துரையாடியே சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், விவசாயி அல்லாத விவசாயத்துறையைப் பற்றி தெரியாத ஒருவர் நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய தீர்மானங்களை எடுப்பது ஒரு வியப்பான விடயமாகும்.

இந்த ஆட்சியை மாற்றி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

நாட்டில் மேலும் 19 பேரின் உயிரைப் பறித்த கொரோனா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் (07) மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,875ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் இருக்கவில்லை!

0
சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

அமெரிக்காவின் பயணத்தடை குறித்து ஈரான் கடும் சீற்றம்!

0
ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் புதிய பயண தடை உத்தரவு வரும் திங்கள்கிழமை நள்ளிரவு...

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மலையகம் குறித்தும் ஆராய்வார்!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் , வடக்குக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளார். இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், மலையக மக்களின் நிலை பற்றியும்...