
டான் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

பஸ்களில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகிறதா?
பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான விதிமுறை 90% அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பெரும்பாலான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், பொதுமக்களும் இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட சில பகுதிகளில், குறிப்பாக அலுவலக நேரங்களில், ஆசன எண்ணிக்கைகளை விடவும் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக தெரிவித்தார்.
சப்புகஸ்கந்தவில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது!
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் அண்மையில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், தொடர்பில் ஏற்கனவே, மட்டக்குளி – சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணின் சடலத்தை கொண்டுசென்றதாகக் கருதப்படும் பாரவூர்தியொன்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த சஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கடந்த 4 ஆம் திகதி பயணப் பையில் வீசப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்று அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், ஒக்டோபர் 28 ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டிலிருந்து மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், கொலையுண்ட பெண் சூதாட்டத்தில் ஈடுபடுவதுடன் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்பதும் தெரியவந்தது.
இதேவேளை, சப்புகஸ்கந்த, ப்ளூமெண்டல், மாளிகாவத்தை மற்றும் களனி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த மரணம் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவ தினத்தன்று பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த பெண், ப்ளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ரொசானா என்ற பெண் மற்றும் அவரது சகோதரர் எனக் கூறப்படும் நபர் ஆகியோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பணத் தகராறு கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பாத்திமா மும்தாஜ் கழுத்தை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பாத்திமா மும்தாஜின் சடலம், ரொசானாவின் வீட்டில் பயணப்பையில் வைக்கப்பட்டு, முழுமையாக மூடப்பட்ட பின்னர் பாரவூர்தியின் உதவியுடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பை கொட்டும் பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாத்திமா மும்தாஜ் கொலை வழக்கில் 36 வயதான ரொசானா மற்றும் அவரது கணவர் ஆகியோர் முன்னதாக கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சப்புகஸ்கந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 7 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து அபராத கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராத பற்றுச்சீட்டுக்கான மேலதிக அபராதக் கட்டணம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அறவிடப்படும் என்பதோடு, இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வரை மேலதிக அபராத கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தபால்மா அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.
பஸிலின் ‘பட்ஜட்’டை நம்ப முடியாது – பொன்சேகா கருத்து
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம்மீது நம்பிக்கை வைக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எண்ணிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டே பட்ஜட் முன்வைக்கப்படும். சில மக்கள் நலத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை அமுலுக்கு வராது. எனவே, நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ள பட்ஜட்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களிடமிருந்து எதையாவது பறிப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.”- என்றார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்ல. முறையான விசாரணைகளும் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாட்டு மக்களும் உள்ளனர் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
ஹப்புத்தளை சுகாதார பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா
ஹப்புத்தளை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் புபுது கருணாதிலக்க தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை (இன்று) 09-11-2021 வெளியான போது, மேற்படி எட்டு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த தியத்தலாவையில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் எட்டுப் பேரே, கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளனர்.
அத்துடன், பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் ஐந்து வயதுகள் மற்றும் அதற்கு குறைவான வயதுகளைக் கொண்டு 27 சிறார்கள், கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளனர்.
மேலும் அக்காப்பகத்தில் பணியாளர்கள் ஐவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. அவ்வகையில் அக்காப்பகத்தில் மொத்தம் 32 பேர் தொற்றுக்கிழக்காகியுள்ளனரென்று பண்டாரவளை சுகாதார சேவை வைத்திய அதிகாரி டி.எம்.ஏ.ஆர். திசாநாயக்க கூறினார்.
இக்காப்பகத்தில் 52 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொண்ட போது, அவர்களில் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேரும், சிறுவர் காப்பகத்தில் 32 பேருமாக 40 பேரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் நேரடிக் கண்கானிப்புக்களுடன், கோவிட் 19 சிகிச்சை நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக உயர்வு! விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அந்தவகையில் விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் நேற்று இரவு முதல் (08.11.2021) திறக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்திற்கு தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பில் காணாமல் போன மூன்று சிறுமியர்! தேடியலையும் பெற்றோர்
கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று (08) காலை 10 மணி முதல் இந்த சிறுமியர் கொழும்பில் சில இடங்களுக்குச் சென்றுள்ளதாக குறித்த சிறுமியரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 – 9.30 மணியளவில் ராஜகிரிய பிரதேசத்தில் இவர்களைக் கண்டதாக குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்
16 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 11 பேர் பலி! ஐவர் காயம்!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 மாவட்டங்களில் 78 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் மேற்படி மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த 48 மணிநேரத்துக்கு இதே காலநிலை நீடிக்கும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.
ரணிலை ஆலோசகராக ஏற்பாரா சஜித்?
” சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை, ஆலோசகராக நியமித்துக்கொள்ளுங்கள். அப்போது சிறந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
நாடாளுமன்றத்தில் இன்று சீன உரக்கப்பல் தொடர்பிலும், விவசாயிகளின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் சஜித் பிரேமதாச கேள்விகளை எழுப்பினார்.
இதன்போதே விவசாயத்துறை அமைச்சர், மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
” ரணிலை சந்திக்கவும். வெற்றியை வழங்கி மன்னிப்பு கோரவும். அவரிடம் ஆலோசனை பெறவும். அப்போது சரியான கேள்விகளை எழுப்பிலாம்.”- என்றார் அமைச்சர் மஹிந்தானந்த.
அத்துடன், விவசாயிகளை இந்த அரசு ஒருபோதும் கைவிடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.