Home Blog Page 2680

மண்சரிவில் சிக்குண்டு மேலும் இருவர் பலி!

குருணாகல், ரிதீகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இருவர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீடொன்றின்மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குருணாகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தில் யுவதியொருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நில்லம்பே நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

கலஹா, நில்லம்பே நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள்  திறக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 16 மாவட்டங்களில் கடும் மழையுடன்கூடிய சீரற்ற வானிலை நிலவுகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் கடும் மழை பெய்துவருகின்றது.

இதனால் நில்லம்பே நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை திடீரென உயிரிழப்பு!

அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

தெனியாய,கொட்டப்பொல பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த 27 வயதுடைய ஆசிரியை ஒருவரே திடீரென மயங்கி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த குறித்த ஆசிரியைக்கு 13 வயதில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

‘எங்களுக்குள் சண்டை இல்லை – முன்னோக்கி பயணிப்போம்’

” எனக்கும், எனது அமைச்சின் செயலாளருக்குமிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒன்றாக இணைந்தே குழுவாக சர்வதேச மட்டத்திலுள்ள சவால்களை எதிர்கொள்கின்றோம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நான் பல அமைச்சுகளை வகித்துள்ளேன். பலருடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். அந்தவகையில் வெளிவிவகார அமைச்சின் தற்போதைய செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயற்படக்கூடியவர். ஏதாவது வேலையை ஒப்படைத்தால் உரிய நேரத்துக்குள் அதனை செய்துமுடிக்கும் ஒழுக்க விழுமியமும் அவரிடம் உள்ளது.

எனக்கும், அவருக்குமிடையில் எவ்வித பிரச்சினையும், பிளவும் இல்லை. அவ்வாறு உள்ளது என பரபும் தகவல்கள் போலியானவை. அவற்றை நிராகரிக்கின்றேன். எமது நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் உள்ளன. அவற்றை ஒன்றாக இணைந்து குழுவாகவே நாம் எதிர்கொண்டுவருகின்றோம். மாற்றமும் ஏற்பட்டுள்ளது. “ – என்றார்.

‘ஓய்வுபெறும் வயதெல்லை 60’ – 11 ஆம் திகதி சட்டமூலம் சபையில் முன்வைப்பு

ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் இன்று (09) இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோன்று, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்த) சட்டமூலத்துக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சட்டமூலங்கள் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே ஆகும்.

இந்த சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, வடிவேல் சுரேஷ், அசோக்க பிரியந்த, வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

10 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,892 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 02 பேரும் 30 வயதுக்குக் கீழ் ஒருவரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 6,689 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 6,689 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளது.

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து!

தம்புள்ள – குருணாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிக மழை காரணமாக குறித்த பேருந்து வீதியைவிட்டு வழுக்கிச்சென்று வயல் நிலத்துக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதுருவெல – குருணாகல் வீதியில் சேவையில் ஈடுபட்டுவந்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு

நாளையுடன் நிறைவடையவிருந்த கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கைமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

யாழில் 17 சபைகளிலும் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்!

0
"எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட...

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

0
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்." - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.காங்கேசன்துறை ரயில்...

தாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

0
பொலன்னறுவை மாவட்டத்துக்குட்பட்ட திம்புலாகல எல்லவெவ வாவியில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். தாய், மகள் மற்றும் இளம் தம்பதியினர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை...