Home Blog Page 2679

கதிர்காமம் கோவிலுக்கு கிடைத்த நன்கொடைகள் தொடர்பிலும் விசாரணை

கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

குறித்த கோவிலில் இருந்த ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லொன்றும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இரத்தினபுரியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர், நேர்த்திக் கடனொன்றை செலுத்துமுகமாகவே, இம் மாணிக்கக்கல்லை, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு வழங்கியிருந்தார்.
இம் மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பமை குறித்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்பு, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு ஏற்கனவே நேர்த்திக்கடனுக்காக வழங்கப்பட்டிருந்த 38 பவுன் எடையுள்ள தங்கத் தகடொன்றும் காணாமல் போயுள்ளது. இந்தத் தங்கத் தகட்டினை, போதைப் பொருள் வர்த்தகர் அங்கொட லொக்கா என்று அழைக்கப்படுபவர், தமது மகனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துமுகமாகவே, மேற்படி தங்கத் தகட்டினை, ஆலயத்திற்கு வழங்கியிருந்தார்.

இத் தங்கத் தகடு காணாமல் போனதையடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. இது குறித்து குற்றப் புலனாய்வுப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இத் தகடு ஆலயத்திற்கு வழங்கியமை தொடர்பாக, அங்கொட லொக்காவின் மனைவியிடமும் பொலிசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேர்த்திக்கடன்களுக்கு செலுத்தப்பட்டிருந்த 38 பவுன் தங்கத் தகடு, 50 மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பது குறித்து, குற்றப் புலனாய்வுப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இவ் ஆலயத்திற்கு இதுவரையில் வழங்கப்பட்ட நேர்;த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைப் பொருட்கள் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன.

-நிருபர் – எம். செல்வராஜா, பதுளை-

O/L செயன்முறை பரீட்சைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம்

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.

பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

பின்னர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ஆம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

தனது திருமண நிகழ்வு குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.

எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

‘சீரற்ற காலநிலை’ – பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அத்துடன், நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அவர் கூறினார்.

அனர்த்த நிலையை எதிர்கொள்வதற்கு எதிரணியின் ஒத்துழைப்பையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று கோரினார்.

மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 150 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தனிவீடு – அரவிந்தகுமார்

பதுளை பகுதியின் வேவஸ்சை, கிளன் அல்பின், தெளிவத்தை போன்ற பெருந்தோட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் எதிர்நோக்கப்பட்ட பகுதிகளில், வாழ்ந்து வரும் 150 குடும்பத்தினருக்கு, பாதுகாப்பபான இடங்களில் தனி வீடுகளை நிருமாணிக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி, மூன்று பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும், பலாங்கொடை பிளான்டேசன் நிறுவன நிறைவேற்று அதிகாரி மற்றும் குறிப்பிட்ட தோட்டமுகாமையாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் அனுப்பியுள்ள கடிதங்களிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இக்கடிதங்களின் பிரதிகள் பதுளை மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அக் கடிதங்களில்’ வேவஸ்சை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயப் பிரதேசத்தில் 63 குடும்பங்கள் வாழ்ந்து வந்த போதிலும், 25 குடும்பங்களுக்கு மட்டுமே, பாதுகாப்பான இடங்களில் காணித்துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 38 குடும்பங்களுக்கு, காணித்துண்டுகள் ஒதுக்கப்படவில்லை. ஆகவே, இவர்களுக்கான காணித்துணடுகள் விரைவில் ஒதுக்கப்படல்வேண்டும்.

கிளன் அல்பின் பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயப்; பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 38 குடும்பத்தினருக்கான பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கான காணித்துண்டுகள் பலகல தோட்டப்பிரிவின் 26ம் இலக்கப் பகுதியில ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இக் காணித்துண்டுகள் வீடுகள் நிருமாணிப்பதற்கு உகந்ததல்லவென்று, தேசிய கட்டிட ஆய்வக அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகையால், வீடுகள் நிருமாணிப்பதற்கு உகந்தவகையில் காணித்துண்டுகளை, விரைவில் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தெளிவத்தை பெருந்தோட்டத்தில் மண் சரிவு அபாயப் பிரதேசத்தில் 53 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இப் பட்டியலில் 17 குடும்பத்தினருக்கு, அரசின் நிதி உதவியுடன் வீடுகள் நிருமாணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மிகுதியுள்ள 36 குடும்பத்தினருக்கு ‘வெஸ்மோலேன்ட பிரிவில் வீட்டுத்திட்டத்திற்கென காணித்துண்டுகள் தோட்ட முகாமைத்துவத்தினால் இனம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மேற்படி பெருந்தோட்டங்களி மண் சரிவு அபாயங்கள் எதிர்நோக்கபட்ட பகுதிகளில், வாழ்ந்து வரும் 150 குடுபத்தினருக்கு பாதுகாப்பான இடங்களில், தனி வீடுகளை நிருமாணிக்க, இடர் முகாமைத்துவ அமைச்சு, தேவையான நிதியினையும் ஒதுக்கியுள்ளது. ஆகவே, குறிபிட்ட பெருந்தோட்டங்களில் மண் சரிவுகளுக்குட்படாத வகையிலான காணித் துண்டுகளை ஒதுக்கித்தருமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேவஸ்சைஇ கிளன் அல்பின், தெளிவத்தை ஆகிய பெருந்தோட்டங்களின் தோட்ட முகாமையாளர்களுக்கு தனித் தனியாகவே கடிதங்கள், பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

எகிறுமா எரிபொருள் விலை? பட்ஜட்டுக்காக காத்திருக்கும் கம்மன்பில!

” உலகில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படாத ஒரே நாடு இலங்கையாகும். எனினும், எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதா அல்லது இல்லையா என்பது நிதி அமைச்சின் கைகளிலேயே உள்ளது. “- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” என்னிடமுள்ள தகவல்களின் அடிப்படையில் உலகில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்காத ஒரே நாடு இலங்கையாகும். குறிப்பாக உலக சந்தையில் கடந்த 5 மாதங்களில் எரிபொருட்களின் விலை 27 வீதத்தால் அதிகரித்துள்ளது.

எமது நாட்டு மக்கள் பொருளாதாரப் பிரச்சினையால் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கக்கூடாது என்பதாலேயே நாம் விலை அதிகரிப்பை செய்யவில்லை. எனினும், எதிர்காலத்தில் அந்த சுமையை மக்களே தாங்கிக்கொள்ள நேரிடும்.

இம்மாதம் பட்ஜட் முன்வைக்கப்படவுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு நிதி அமைச்சரிடமே உள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு நிவாரணம் வழங்குவதா அல்லது எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதா அல்லது எரிபொருட்கள்மீதான வரியை குறைப்பதா என்பதனை நிதி அமைச்சரே தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸரை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை

பைஸர் பயோஎன்டெக் நிறுவனம் தங்களது கொவிட் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர்களுக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் 10 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்றாவது தடுப்பூசி 95.6 சதவீதம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் குறித்த நிறுவனம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் அவசர கால பயன்பாட்டுக்காக மூன்றாவது தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கடந்த செப்டம்பர் அங்கீகாரம் வழங்கியது.

16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்துவதற்கான முன்மொழிவும் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் பல நாடுகளில் மூன்றாவது தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீட்புக்குழுக்கள் உஷார் நிலையில்!

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் எத்தகைய இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்,முப்படைகள் மற்றும் பொலிஸ் துறையினர் எத்தகைய இயற்கை அனர்த்தங்களை எதிர் கொள்வதற்கும் தயாராக உள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் காரியாலயங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டவுடன் உடனடியாகவே அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக சீரற்ற காலநிலை நிலவும் காலங்களில் சுற்றுலா செல்லுதல், மலை ஏறுதல்,நீர்நிலைகளில் குளித்தல், படகு சவாரி செய்தல் உட்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறின்றி ஏனையோரது உயிர்களும் பாதிக்கும் வகையில் செய்யப்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் 20 பேர் பலி! ஒருவர் மாயம்! ஐவர் காயம்!!

நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 17,481 குடும்பங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

1,498 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 23 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

3,537 பேர் உறவினர்களில் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இருவேறு பகுதிகளில் பாரிய மண்சரிவு – இருவர் பலி – இருவர் மாயம்

கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல்
போயுள்ளனர்.

கேகாலை அத்னாதொட பகுதியில் நேற்றிரவு வீடொன்றின்மீது பாரிய மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.

ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் காணாமல்போயுள்ளனர். மீட்பு பணி தொடர்கின்றது.

குருணாகல் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 65 மற்றும் 70 வயதுகளுடைய இருவர் பலியாகியுள்ளனர்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

கைது பயத்தில் கடவுளை நாடும் அரசியல்வாதிகள்!

0
ஊழல்,   மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் எனக்     கருதப்படும் சில அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் தற்போது வழிபாட்டு தலங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர் என சிங்கள...

யாழில் 17 சபைகளிலும் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்!

0
"எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட...

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

0
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்." - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.காங்கேசன்துறை ரயில்...