Home Blog Page 2678

திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்குகள்மீது கழுகுப்பார்வை!

பன்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவிப்பு, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவால், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதியன்று, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டப்ளிய.கே.டி.விஜேரத்னவால், 2021.11.08ஆம் திகதியன்று அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்குகளின் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வறிக்கைகள் தற்போது கிடைத்தவண்ணம் காணப்படுவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

விசாரணைகள் முடிவடையாதுள்ளமையால், கோரப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் முறையாக பட்ஜட்டில் கல்விக்கு 7.5 வீதம் ஒதுக்கீடு!

சுமார் இருபத்தைந்து வருடங்களாக நீடித்து வந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அறிவித்தமைக்காக பாராளுமன்ற குழு அறை 01இல் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
பிள்ளைகளினதும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 30000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாகவும், அதற்கமைய மொத்த வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
அதற்கமைய தொழிற்சங்க கோரிக்கையை நிறைவேற்றியமை குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன  இக்கலந்துரையாடலின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்பான்கொட  இதன்போது அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கையளித்தார்.
1997ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இந்நெருக்கடியின் முழுமையான சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு குறிப்பிட்ட கால வரையறை அவசியம் என ஒப்புக்கொண்ட அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதன் ஆரம்ப கட்டமாக மூன்றில் ஒரு பங்கை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒரே தடவையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டனர்.
குறித்த சந்திப்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிக்கையில்,
” நாம் இது தொடர்பில் கடந்த ஜுலை மாதம் 26ஆம் திகதியே முதல் முறையாக கலந்துரையாடினோம். அதன்போது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொகுகே, கலாநிதி பந்துல குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ரமேஷ் பதிரன, லசந்த அழகியவன்ன ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்தோம்.
அது பின்னர் நான்கு பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன்போது பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டது.
இது இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக நீடிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடாகும். இதனை சீரமைக்கவே கோரிக்கை விடுக்கப்பட்டது. முழு அரச சேவையிலும் சம்பள ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே எமது பரிந்துரையாகும்.
தற்போது வரவு செலவுத் திட்டம் வருகிறது. மேற்குறிப்பிட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி பீடத்தின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், என்னை சந்தித்த போது இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரியிருந்தனர்.

கொவிட் தொற்றால் 16 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,908 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 488 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 488 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 547,141 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 10, 732 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கம்பஹா, கேகாலை, குருணாகல், மாத்தளை, இரத்தினபுரி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரிக்க தீர்மானம்!

ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இக்குழுவின் கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் நேற்று (09) இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோன்று, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (திருத்த) சட்டமூலத்துக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சட்டமூலங்கள் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக, இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குநருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே அமையும்.

இந்த சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு

சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துமிந்த நாகமுவவை கைது செய்ய பிடியாணை

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுப்பாடற்ற விதத்தில் செயற்பட்டமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி எதற்காக உருவாக்கப்பட்டது? சபையில் அனுரகுமார கேள்வி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி எதற்காக உருவாக்கப்பட்டது? அதனைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்த வரையறையின் கீழ் தெரிவுசெய்யப்பட்டனர்? போன்ற கேள்விகளை  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் எழுப்பினார்.

ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களின் அடிப்படையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். இந்தப் பதிலில் திருப்தி இல்லை என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்தச் செயலணியை உருவாக்குவது தொடர்பில் ஏற்கனவே பல எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற அதே சூழ்நிலையில், நாட்டில் மக்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாகப் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.

அதேபோன்று இந்தச் செயலணி உருவாக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமது கேள்விக்கு சரியான பதிலை வழங்க முடியாமல், பிரதமரும், சபை முதல்வரும் தடுமாறுவதை அறிவதாகவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது பதில் வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அதன்போது அதனை எதிர்க்காதவர்கள், இதுபற்றிக் கேள்வி எழுப்பாமல் ஜனாதிபதிக்கு தமது கடமையை நிறைவேற்ற இடம் அளிக்குமாறு கூறினார்.

இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது முறையற்றது எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான அவருக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என்றும் கூறினார்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: புலம்பெயர்ந்தோர்மீது கடும் நடவடிக்கை!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த கலவரத்தால், புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு போராட்டங்கள...

காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது

0
கிரெட்டா துன்பர்க் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களுடன் சென்ற காசாவுக்கான மனிதாபிமான கப்பலை இஸ்ரேல் படையினர் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த...

உள்ளக பொறிமுறை : ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு விளக்கமளிக்க தயாராகும் இலங்கை!

0
பொறுப்பு கூறல் விவகாரத்தில் உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் செப்டம்பர்...