Home Blog Page 2684

‘ஐக்கிய மக்கள் சக்தி மாற்று சக்தி கிடையாது’

ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீரிகம பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு,

“தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் மாற்று அரசியல் சக்தியாக, ஐக்கிய மக்கள் சக்தியை இன்னும் கருதத் தொடங்கவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த 50 வீதமானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் .

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் பல உறுப்பினர்கள் மீது எவ்வித ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களும் கிடையாது.

ஊழல் மோசடிகளை தடுப்பதாக கூறி ஆட்சிப் பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர்.” – என்றார்.

இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக கோருகிறது சீன உர நிறுவனம்!

விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம் சட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் அலட்சியத்தினாலும் மற்றும் தவறான அறிக்கைகள் காரணமாகவும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட, ஹிப்போ ஸ்பிரிட் (Hippo sprit) கப்பலில் உள்ள சேதன உரத்தில் அர்வீனியா எனப்படும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்றும், அதில் அதிக பாதுகாப்பான மற்றும் அதிக திறன் கொண்ட சேதன உரமே இருப்பதாகவும் சீன கிண்டாவோ சீவிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த சட்டக் கடிதம் குறித்து தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் மேலதிக பணிப்பாளர் வைத்தியர் துஷார விக்கிரமாராச்சியிடம் வினவியபோது, ​​இதுவரை தமக்கு அக்கடிதம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

33 நாட்களுக்கு தொடர்ச்சியாக கூடும் நாடாளுமன்றம்

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

அதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதிவரை விவாதம் நடைபெறும்.

எனவே, இன்று முதல் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.

ஈராக் அரசின் இதயத்தின் மீது தாக்குதல் – அமெரிக்கா சீற்றம்

ஈராக் நாட்டின் பிரதமரை கொல்வதற்காக அவரது வீட்டை குறிவைத்து டிரோன், ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது.

ஈராக் நாட்டின் பிரதமராக முஸ்தபா அல் கதிமி (வயது 54) உள்ளார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் பதவிக்கு வந்தார். முன்னதாக அவர் அந்த நாட்டின் உளவுத்துறை தலைவராக பதவி வகித்தார். அவர் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்று ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி அங்கு நடந்த பொதுத்தேர்தலிலும், அதன் முடிவுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஈரான் ஆதரவு அரசியல் குழுக்களின் ஆதரவாளர்கள், பிரதமர் வீடு அமைந்துள்ள பசுமை மண்டலத்துக்கு அருகே ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் முஸ்தபா அல் கதிமியை கொல்வதற்கு குறி வைத்து, பாக்தாத் பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது நேற்று வெடிபொருட்களை ஏந்திய டிரோன்களை கொண்டும், ராக்கெட்டை கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் பிரதமரின் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பிரதமர் முஸ்தபா அல் கதிமி காயமின்றி உயிர் தப்பினார்.

இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு போராளி அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த கொலை முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-

ஈராக் அரசின் இதயத்தின் மீது (பிரதமர் இல்லத்தின்மீது) நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஈராக்கின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு பொறுப்பேற்றுள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் சாதனை

ரி – 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.

ரி – 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை அவுட்டாக்கினார். இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது.

இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பவுலர், மொத்தத்தில் 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.

டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

மாற்று வழியை நாடுவோம் – பங்காளிகள் எச்சரிக்கை

” மக்களுக்கான பயணத்தை அரசு மேற்கொள்ளாவிட்டால் பங்காளக்கட்சிகளுக்கு மாற்றுவழியை நாடவேண்டிவரும்.” – என்று அரச தலைமைக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரண.

” தேர்தலுக்கு முன்னர் பங்காளிக்கட்சிகளுக்கு இந்த அரசு பல உறுதிமொழிகளை வழங்கியது. அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இன்னும் சாதாரண எம்.பியாகவே இருக்கின்றேன். எனவே, மக்களுக்கு நன்மை பயக்காவிட்டால், அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் மாற்று வழியை நாடுவோம்.”- என்றும் திஸ்ஸ வித்தாரண கூறினார்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்றும், சுதந்திரத்துக்கு பிறகு உருவான மோசமான அமைச்சரவையே தற்போது உள்ளது என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகர அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், விமல்வீரசன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அரசை எச்சரித்துள்ளனர்.

பஸிலின் புதிய திட்டம் வெளியானது…

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை வலுவானதாக சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார்.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குக மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் வீடொன்றுக்கு அரைமூடி தேங்காய் – அரசாங்கத்தின் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் வெளியிட்ட கருத்து நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் நாள் ஒன்றுக்கு அரைமூடி தேய்காயை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சரியான முறையில் பயன்படுத்தினால் அது சாத்தியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வீடுகளில் தேங்காய் பயன்பாடு நூற்றுக்கு 30 வீதமான அளவு விரயமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கையால் தேங்காய் பால் பிளித்தால் 20-30 சதவீதம் தேங்காய்ப்பால் கிடைத்தாலும், உரலில் இடித்து அல்லது அம்மியில் அரைத்து பால் எடுத்தால் 50 சதவீத தேங்காப்பால் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 168 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 458 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 545,256 ஆக அதிகரித்துள்ளது.

பெருந்தொகை கஞ்சா, பணத்துடன் 8 பேர் கைது

கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 75.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 790,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன், எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களும், 3 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 790,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 12 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரையும்,  நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (08.06.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.06.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி ஜூன் 26 ஆரம்பம்!

0
யாழ். செம்மணி - சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின்போது நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில இருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளன. இந்த...

209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்: உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல்!

0
ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும்...