Home Blog Page 2685

மாற்று வழியை நாடுவோம் – பங்காளிகள் எச்சரிக்கை

” மக்களுக்கான பயணத்தை அரசு மேற்கொள்ளாவிட்டால் பங்காளக்கட்சிகளுக்கு மாற்றுவழியை நாடவேண்டிவரும்.” – என்று அரச தலைமைக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரண.

” தேர்தலுக்கு முன்னர் பங்காளிக்கட்சிகளுக்கு இந்த அரசு பல உறுதிமொழிகளை வழங்கியது. அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இன்னும் சாதாரண எம்.பியாகவே இருக்கின்றேன். எனவே, மக்களுக்கு நன்மை பயக்காவிட்டால், அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் மாற்று வழியை நாடுவோம்.”- என்றும் திஸ்ஸ வித்தாரண கூறினார்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்றும், சுதந்திரத்துக்கு பிறகு உருவான மோசமான அமைச்சரவையே தற்போது உள்ளது என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகர அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், விமல்வீரசன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அரசை எச்சரித்துள்ளனர்.

பஸிலின் புதிய திட்டம் வெளியானது…

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை வலுவானதாக சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார்.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குக மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் வீடொன்றுக்கு அரைமூடி தேங்காய் – அரசாங்கத்தின் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி

தென்னம் ஆராய்ச்சி சபையின் தலைவர் சாரங்க அலஹபெருமவினால் வெளியிட்ட கருத்து நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் நாள் ஒன்றுக்கு அரைமூடி தேய்காயை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சரியான முறையில் பயன்படுத்தினால் அது சாத்தியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வீடுகளில் தேங்காய் பயன்பாடு நூற்றுக்கு 30 வீதமான அளவு விரயமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடையில் 70 வீதம் உள்நாட்டு பாவனைக்காகவே பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கையால் தேங்காய் பால் பிளித்தால் 20-30 சதவீதம் தேங்காய்ப்பால் கிடைத்தாலும், உரலில் இடித்து அல்லது அம்மியில் அரைத்து பால் எடுத்தால் 50 சதவீத தேங்காப்பால் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 168 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 458 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 545,256 ஆக அதிகரித்துள்ளது.

பெருந்தொகை கஞ்சா, பணத்துடன் 8 பேர் கைது

கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 75.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 790,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன், எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களும், 3 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 790,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 12 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரையும்,  நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக புதிய திட்டம் அறிமுகம்

கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் பெற்றுக்கெர்டுப்பதற்காக புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தேசிய கற்கை நிறுவனத்தின் பணிப்பாளா் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தாா்.
அந்த திட்டத்துக்கமைய அத்தியாவசிய பகுதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த உத்தேச திட்டத்துக்கமைய, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி கற்றும் மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நவம்பா் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில்  அமுலாகும் வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சிலவேளை இந்த வேலைத்திட்டம் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கலாம். இந்த குறித்த காலப்பகுதியில் இந்த கற்கை நெறிகள் தொடர்ந்து இடம்பெறும். தரம் 3 , 4 மற்றும் 5 களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் மே மாதம் முதல் டிசம்பா் மாதம் வரையில் அவர் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டு டிசம்பா் மாதமாகும்போது மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை சாதாரண நிலைமைக்குக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளிலிருந்து அடுத்த வகுப்புகளுக்கு செல்வதற்கான கல்வியை வழங்கவே தற்போது தீர்மானித்துள்ளோம்.
இந்த திட்டத்தை நிர்வாகிக்கும் முறை தொடர்பிலான சுதந்திரம்  பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, கல்வி அமைச்சு மற்றும் பரீட்கைள் ஆணையாளா் நாயகத்துடன் கலந்துரையாடியதன் பின்னரே இந்த யோசனையை முன்வைத்துள்ளோம். பரீட்சை இடம்பெறும் காலத்தை பொறுத்து இந்த வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம். கைவிடப்பட்ட பாடத்திட்டங்களில் முக்கிய பாடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள வகுப்புகளிலிருந்து அடுத்த வகுப்புக்குச் செல்லும் போது பரீட்சை வைத்து மாணவர்களின் நிலை தொடர்பில் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
இதேவேளை கொரோனா தொற்று பரவல் நிலைமையின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கற்கை நிறுவனத்தினால்  மதிப்பீடொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வி இழப்பானது 2020ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தில் 55 சதவீதமும் ஏனைய மாகாணங்களில் 45 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மேல் மாகாணத்தில் 90 சதவீதமும், ஏனைய மாகாணங்களில் 70 சகவீதமும் கல்வி இழப்பு பதிவாகியிருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
அந்த திட்டத்துக்கமைய அத்தியாவசிய பகுதிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த உத்தேச திட்டத்துக்கமைய, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி கற்றும் மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நவம்பா் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில்  அமுலாகும் வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சிலவேளை இந்த வேலைத்திட்டம் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கலாம். இந்த குறித்த காலப்பகுதியில் இந்த கற்கை நெறிகள் தொடர்ந்து இடம்பெறும். தரம் 3 , 4 மற்றும் 5 களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் மே மாதம் முதல் டிசம்பா் மாதம் வரையில் அவர் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டு டிசம்பா் மாதமாகும்போது மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை சாதாரண நிலைமைக்குக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளிலிருந்து அடுத்த வகுப்புகளுக்கு செல்வதற்கான கல்வியை வழங்கவே தற்போது தீர்மானித்துள்ளோம்.
இந்த திட்டத்தை நிர்வாகிக்கும் முறை தொடர்பிலான சுதந்திரம்  பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, கல்வி அமைச்சு மற்றும் பரீட்கைள் ஆணையாளா் நாயகத்துடன் கலந்துரையாடியதன் பின்னரே இந்த யோசனையை முன்வைத்துள்ளோம். பரீட்சை இடம்பெறும் காலத்தை பொறுத்து இந்த வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம். கைவிடப்பட்ட பாடத்திட்டங்களில் முக்கிய பாடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள வகுப்புகளிலிருந்து அடுத்த வகுப்புக்குச் செல்லும் போது பரீட்சை வைத்து மாணவர்களின் நிலை தொடர்பில் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
இதேவேளை கொரோனா தொற்று பரவல் நிலைமையின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கற்கை நிறுவனத்தினால்  மதிப்பீடொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வி இழப்பானது 2020ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தில் 55 சதவீதமும் ஏனைய மாகாணங்களில் 45 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மேல் மாகாணத்தில் 90 சதவீதமும், ஏனைய மாகாணங்களில் 70 சகவீதமும் கல்வி இழப்பு பதிவாகியிருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

’உற்பத்தி கூடினாலேயே பொருள் விலை குறையும்’

உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்தால் மட்டுமே பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா பேரழிவை அடுத்து இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில், இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

மூடுங்கள், மூடுங்கள் என்று போராட்டம் நடத்தியபோது கடும் நெருக்கடியில் தீர்மானம் எடுத்தோம் என்ற அவர், மூட மூட உற்பத்தி குறையும் என்றும் மூட மூட மக்களின் சுயதொழில் இல்லாமல் போகும் என்றும் குறிப்பிட்டார்.

நல்லை ஆதீனத்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

கந்த சஷ்டி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திருஞானசம்மந்தர் மடத்தில் நல்லை ஆதீனத்தை  இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றார்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டில் இந்து சமய சட்டங்கள்இஇந்து சமயத்தின் கொள்கைகள் முக்கியத்துவம் போன்றவற்றை பாதுகாப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தங்க விலையிலும் கணிசமான மாற்றம் !

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒருவாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
கடந்த  வியாழக்கிழமை தங்க ஒரு அவுன்சின் விலை 30 டொலர்களால் அதிகரித்துள்ளதுடன், மீண்டும் வெள்ளிக்கிழமையன்று 23 சதவீதத்திலிருந்து  30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.
அதற்கமைய, வார இறுதியில் தங்க அவுன் ஒன்றின் விலை 1,816 அமெரிக்க டொலரிகளினால் 80 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.
அமெரிக்காவின்  வேலைவாய்ப்பு தரவுகளின் போக்கை அவதானிக்கும்போது  இது விசேட அம்சமாக காணப்படுகின்றது.

கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(06) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,856 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

அமெரிக்காவின் பயணத்தடை குறித்து ஈரான் கடும் சீற்றம்!

0
ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் புதிய பயண தடை உத்தரவு வரும் திங்கள்கிழமை நள்ளிரவு...

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மலையகம் குறித்தும் ஆராய்வார்!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் , வடக்குக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளார். இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், மலையக மக்களின் நிலை பற்றியும்...

ஜனாதிபதி அநுர ஜேர்மன் பயணம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்கின்றார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினரும் இவ்விஜயத்தில் பங்கேற்கின்றனர். இவ்விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் உட்பட அந்நாட்டின் முக்கிய...