Home Blog Page 2690

புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவேன் – ஜனாதிபதி திட்டவட்டம்

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டபடி, புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாகத் நான் ஏற்படுத்துவேன்.” -என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் ஜனாதிபதி கூறினார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகில் ஏனைய நாடுகளைப் போன்று, இலங்கையும் கொவிட் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தின் முன்னே அடையாளம் காணமுடியாத தொற்றுநோயுடன், பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அன்று தாம் வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நிறைவுசெய்ய முடியவில்லை. ஆனாலும், அதில் எந்தவொரு குறையையும் வைக்காது, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கொவிட் நோய்த்தொற்று காரணமாகச் சுற்றுலா கைத்தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்மூலம் இழக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழில்கள், கிட்டத்தட்ட 03 மில்லியன்கள் ஆகும். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டதோடு, உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டும் வரையான வியாபாரிகள் வரை அனைவரதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அத்துடன், ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியுடனும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறித்த தினத்தில் ஊதியம் வழங்கப்பட்டது.

04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் தவணைகளை உரியவாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டன. நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் பாரிய பொருளாதார சிக்கல்களுடனேயே நிறைவேற்றியதாகவும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.

சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயறு, கௌப்பி, உளுந்து, மஞ்சள் உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். கறுவா, மிளகு, மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர்.

விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் இங்கு தெளிவுபடுத்தினார்.

இந்நிலைமையைப் புரிந்துகொண்டு, பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி  , விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து, இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன், மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர். மேலும் பலர், கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி   அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ஆஸி அணி

டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.

டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். 3-வது ஓவரில் பிஞ்ச் 9 ரன்னில் போல்ட் என்ற முறையில் அவுட் ஆனார்.

இதனையடுத்து டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். 1 ரன் எடுத்தால் வெற்றி பெரும் நிலையில் கெய்ல் பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 53 ரன்னில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

16.2 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

சீமெந்து விலை மீண்டும் எகிறியது!

50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலையா ஆயிரத்து 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னரே சீமெந்து பொதியொன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

‘பயணப் பொதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு’ – இருவர் கைது!

சப்புகஸ்கந்த அரிசி ஆலை சந்தி பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 42 வயதான பாத்திமா முன்டாஸ் எனும் பெண்ணே நேற்று (05) பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த குறித்த பெண், கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவரால் தனது மனைவி காணாமற்போயுள்ளதாக கடந்த 28 ஆம் திகதி புளூமென்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த பெண், மற்றுமொரு பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் தியாகத்துக்கு தயாராகும் ருவான்! பதவியை பணயம் வைத்து அறிவிப்பு

” கட்சியை பலப்படுத்தக்கூடிய ஒருவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு நான் தயார். கட்சிக்காக இந்த தியாகத்தை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போதே ருவான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஐ.தே.கவிலுள்ள தமிழ் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

” ஐக்கிய தேசியக் கட்சிக்காக தம்மை அர்ப்பணித்த நவீன், அர்ஜுன ரணதுங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். ருவானுக்கு சார்பான சிலருக்கே பதவி வழங்கப்படுகின்றது.” – என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே ருவான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை பலப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், தலைமைத்துவத்தை கைப்பற்றும் எண்ணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழி கூட்டிற்குள் சிக்கிய சிறுத்தை

ஹட்டன், டிக்கோயா – ஹார்ட்லி தோட்டத்தில் கோழிக் கூடொன்றில் சிக்கிய சிறுத்தை மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கோழிகளை வேட்டையாடுவதற்காக தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை நேற்றிரவு (05) கோழிக் கூட்டிற்குள் சிக்குண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தோட்ட அதிகாரிகள் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து, சிறுத்தையை மீண்டும் காட்டிற்குள் விடுவிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சிறுத்தை காட்டிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடுவதற்காக சிறுத்தைகள் தமது தோட்டப்பகுதிக்கு இரவு நேரத்தில் வருகை தருவதாக தோட்ட மக்கள் இதன்போது கூறியுள்ளனர்.

கைத்தறியில் புரட்சியை ஏற்படுத்த 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘New 30’ ஐ அறிமுகப்படுத்தும் செலின்

இலங்கையின் ஒரே நியாயமான வர்த்தக உத்தரவாதம் பெற்ற நெசவு நிறுவனமான Selyn, நெசவுத் துறையில் மூன்று தசாப்தங்களாக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அவர்களின் ‘New 30’ மேம்பாட்டை ஆரம்பித்துள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, புளொக்செயின் தீர்வுகளை உள்ளடக்கிய நெசவு-எதிர்காலத்தை நோக்கி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றத்தை Selyn மேற்கொள்ள உள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு கண்டறியும் தன்மை, நெறிமுறை ஆதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பலவற்றைத் தெரிவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

‘The New 30’ஐ அறிமுகப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில், ஸ்தாபகரான சாண்ட்ரா வந்துரகல, இலங்கையில் நெசவுத் தொழிலின் 30 வருடங்களை ஒன்றாகக் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

“இன்று, எங்கள் நெசவாளர்கள், கைவினைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் பயணத்தை நாங்கள் கொண்டாடுகிறோம், அவர்கள் தங்கள் இதயங்களையும் ஆன்மாவையும் உருவாக்கி, இன்று உலகளாவிய வாடிக்கையாளர்களின் வீடுகளை அடைந்துள்ள ஒரு இலச்சினையை உருவாக்குகிறார்கள்”. செலின் 1991இல் வந்துராகலவால் 15 நெசவாளர்களுடன் தனது வீட்டில் இருந்து ஸ்தாபிக்கப்பட்டது. இன்று, இந்த நிறுவனம் இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை மேம்படுத்தியுள்ளது.

“நெசவு எங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவமாக இருப்பதால், எங்கள் சமூகத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”

‘New 30’இல் செலினின் கைவினைப்பொருட்களின் நுண்ணிய துணிகளில் பின்னிப் பிணைந்த புத்தாக்கமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் நெசவு தொழிலுக்கு ஒரு அற்புதமான எதிர்காலத்தைத் திறக்க முடியும் என்று செலின் நம்புகிறது.

கைத்தறி துணிகள் மற்றும் தயாரிப்புகளுக்கு உலகளவில் அதிக மதிப்பை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையை உண்மையிலேயே ஊக்குவிப்பதன் மூலம், நெசவை குறைந்த (மெதுவான) தொழில்நுட்பத்தை உயர் தொழில்நுட்ப தீர்வுகளுடன் (புளொக்செயின்) இணைத்து, கைவினை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதையும் பாதுகாப்பதையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“செலினில், நியாயமான வர்த்தக உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிறுவனமாக, எங்கள் தயாரிப்பு தூண்களாக வெளிப்படைத்தன்மை, பேண்தகைமை மற்றும் நெறிமுறை உற்பத்திக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இது எங்கள் தயாரிப்புகளை வெளிச்சத்தில் பிரகாசிக்க வைக்கும் நடைமுறையாகும்.

நமது நெசவின் பயணம், கைவினை அடிப்படையிலான அத்தியாவசியப் பொருட்களிலிருந்து உலகளாவிய பேண்தகைமை துறையில் முன்னோடியாக மாறுவது மற்றும் உரையாடல்கள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.

30 ஆண்டுகால செயல்பாடுகளில், எங்கள் விநியோகச் சங்கிலியில் அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலமும், நாங்கள் வழங்கும் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்த புதிய ஆடைத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் எங்கள் தொழில்துறையை மாற்றுவதற்கான வலுவான அர்ப்பணிப்பை நாங்கள் செய்கிறோம்.” என Selynஇல் வணிக அபிவிருத்தி பணிப்பாளரும் அடுத்த தலைமுறை முன்னணியினருமான Selyna Peiris மேலும் தெரிவித்தார்.

Selyn தொடர்பாக

Selyn இலங்கையின் ஒரே நியாயமான வர்த்தக நெசவு நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய சமூக நிறுவனங்களில் ஒன்றாகும்.

Selyn கைத்தறி நெசவாளர்களின் பாரம்பரிய இலங்கை சமூகத்தை 100% பருத்தி மற்றும் எல்லையற்ற திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது.

1991ஆம் ஆண்டு சாண்ட்ரா வந்துரகல என்பவரால் நிறுவப்பட்ட செலின், இலங்கையின் குருநாகலில் உள்ள வந்துராகல கிராமத்தில் 15 பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. செலின் இப்போது இலங்கையின் கிராமப்புறங்களில் 1000 அதிகாரம் பெற்ற கைவினைஞர்களின் வலையமைப்பில் பணியாற்றுகிறார்.

Ideal Finance தனது கிளைகளை மேலும் விரிவுப்படுத்துகிறது

தனது வளர்ச்சியின் முக்கிய அங்கமாக Ideal Finance Limited (IFL) வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் முக்கியமான இடங்களில் நான்கு கிளைகளை திறப்பதன் மூலம் தனது வலையமைப்பை 17 இடங்களில் விரிவுப்படுத்தியிருக்கிறது.

IFL, புதிய 16 கிளைகளையும் சேர்த்து நடப்பு நிதியாண்டிற்குள் தனது கிளை வலையமைப்பை இரட்டிப்பாக்க திட்டமிட்டள்ளதாக முன்னர் அறிவித்தது. அதன்படி சுண்ணாகம,; நெல்லியடி, ஜா-எல மற்றும் கடுவலை ஆகிய இடங்களில் புதிய கிளைகளை திறந்துவைத்தது. இங்கு நிலையான வைப்புகள்,குத்தகை வசதிகள் மற்றும் தங்கக்கடன்கள் போன்ற நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

Ideal Financeஇன் துணை தலைவர்,அரவிந்த டி சில்வா, ‘முக்கிய கிராமப்புறங்கள், நகரங்கள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நகர்புற பகுதிகளில் Ideal Finance’s சரியான நேரத்தில் தனது கிளைகளை விரிவுபடுத்துவது எங்கள் சேவைகளை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக அணுக உதவுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதார மாற்றங்களிலிருந்து நிறுவனத்தைப் பயனடையச் செய்கிறது மற்றும் கிளை வலையமைப்பை வலுப்படுத்துவது நிறுவனத்தின் முன்னேற்றத்தினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என நாங்கள் நமபு; கிறோம்’ எனக் கூறினார்

IFL’sஇவ் புதிய கிளைகள் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக வளர்ச்சி சாத்தியமுள்ள வர்த்தக மையங்ககளில் திறப்பதன் மூலம் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் Mahindra மற்றும் Mahindra Financial Services Limited (MMFSL) ரூபா. 2 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டை செய்ததன் மூலம் இப்போது 58.2% பங்குகளுடன் Ideals Finance’sஇன் மிகப்பெரிய பங்குத்தாரராக உள்ளது. இது IFL நிறுவனத்தின் கீழ் 11 பில்லியன் USDக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் ஆதரவைப் பெறுகிறது. இது இலங்கையின் முழு வங்கித்துறையையும் விட அதிகமாகும்.

MMFSL இதிலிருந்து முதலீட்டைப் பெற்றதை தொடர்ந்து Ideal Finance, Fitch மதிப்பீட்டில் ‘BB-(lka)’ இருந்து ‘AA-(lka)’ஆக மேம்படுத்தப்பட்ட ஸ்த்திரத்தன்மைக்கு உயர்த்தபபட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் (March. 31. 2021 உடன் முடிவடைந்தது) தொற்று நோய் சமயத்திலும் தனது சிறநத் வருடாந்தர நிதிச் செயற்திறனை கொடுத்தது. அதன் முந்தைய ஆண்டின் அனைத்து முக்கிய நிதி குறிகாட்டிகளையும் மேம்படுத்துகிறது.வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 76% அதிகரித்து ரூபா.288.4 மில்லியனாக, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YOY), வரிக்கு பிந்தைய இலாபம் (PAT) 74% அதிகரித்து ரூபா. 183.8 மில்லியனாகக் குறைந்தது (YOY). முந்தைய வருடத்தில் 5.2%ஆக இருந்த Gross Non-performing Loans (NPL) விகிதம் 3.3%ஆக இவ் நிதியாண்டில் மேம்பட்டுள்ளது.

Ideal Finance Ltd (IFL) இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு NBFI ஆகும். 2021 மார்ச்சில்; கிராமப்புறங்களில் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும நகரங்களில் தெளிவான நோக்கத்துடன் செயல்பாடுகளைத் தொடங்கியது.

அதன் கடன் வசதிகளில் தங்கக்கடன்கள், SME கடன்கள், தனிநபர் கடன்கள், மோட்டார் கார்கள், முற்ச்சக்கர வண்டிகள், விவசாய வாகனங்கள் மற்றும் வியாபாரம் செய்யும் வாகனங்களுக்கான குத்தகை வசதிகள் உள்ளன.

வியாபாரத்தின் நிலையான வருடாந்தர வளர்ச்சியை பதிவு செய்யும் அதேவேளையில் ஒரு தரமான கடன் கொடுக்கும் வழியையும் IFL உருவாக்கியுள்ளது.

பட விளக்கம்
1. Ideal குழும, தலைவர் – நளின் வெல்கம
2. Ideal Finance துனைத் தலைவர் – அரவிந்த டி சில்வா
3. புதிதாக திறக்கப்பட்ட கிளைகள் சுண்ணாகம் நெல்லியடி, ஜா-எல மற்றும் கடுவலை

 

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக குறைவாக கதைத்து அதிகமாக வேலை செய்யும் இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா

சர்வதேச அளவில் வீரர்களை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு நல்ல பயிற்சியும், நம்பிக்கையும் அளிக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் அவர்களின் கனவை ஒருபோதும் கைவிடாமல், அவர்கள் விரும்பிய வெற்றியை அடைய முடியும்.

கலாநிதி பட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்காக கலாநிததி ஒருவரினால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் மூலம் படிப்படியாக கல்வியைப் பெற்றுக் கொள்வது போன்றதே சர்வதேச மட்டத்திலான போட்டிகளை எதிர்கொள்ளும் மெய்வல்லுநர் வீரர்களும் பல ஆண்டுகளாக படிப்படியாக சிறந்த அர்ப்பணிப்புக்களுடன் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை நோக்கி தம்மை அளவிட வேண்டுமென்றால் விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOC), விளையாட்டு அமைச்சு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தனியார் துறைகளிலிருந்தும் கூட்டு பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னேற வழியில்லாத கிராமப்புற விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட Crysbro Next Champ திட்டம், இலங்கையில் விளையாட்டு துறையில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லைக் குறித்தது என்று குறிப்பிட்ட திரு. மேக்ஸ்வெல் டி சில்வா, NOCSL Crysbro Next Champ Sports புலமைப்பரிசில் திட்டம் இலங்கையின் நீண்டகால விளையாட்டு முன்னேற்றத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு பொன்னான உதாரணம்.

அவர் மேலும் கூறுகையில், NOCSL Crysbro Next Champ திட்டத்தின் மூலம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அனுசரணை வழங்க முன் வந்த ஊசலளடிசழக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இலங்கையின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்ததைச் செய்ய தனியார் துறைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், மேலும் NOCSL Crysbro Next Champ உதவித்தொகை திட்டம் நாட்டின் விளையாட்டுத் துறையில் ஒரு திருப்புமுனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நாம் முன்னேறுவதை உறுதி செய்ய படிப்படியான திட்டமிடல் செயல்முறை இருக்க வேண்டும், முதலில், திறமையான விளையாட்டு வீரர்களை சரியான முறையில் அடையாளம் காண்பது இந்த செயல்பாட்டின் மிக முக்கியமான படியாகும். மேலும் அவரது குடும்பத்தினரின் ஆதரவும், வீரரின் அர்ப்பணிப்பும் வெற்றிக்கு பெரும் சக்தியாகும்.’ என சில்வா சுட்டிக்காட்டினார்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி நடவடிக்கையிலிருந்து சாதனை வரை ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுசரணையாளராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் திரு. மேக்ஸ்வெல் டி சில்வா, இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இங்குள்ள பல விளையாட்டு வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் விளையாட்டு வீரர்களின் நிதி, ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் அனைத்து விளையாட்டுத் தேவைகளையும் வழங்குகின்றனர்.

அத்துடன் தேசிய சம்மேளனத்தினால் விளையாட்டு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டியினால் மேற்பார்வை செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில், வீரர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் மற்றும் அலட்சியத்தால் ஏற்படும் காயங்கள் காரணமாக, அவர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பை சில்வா ஞாபகப்படுத்துகையில், 3 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு சர்வதேச அளவிலான வீரரை உருவாக்கியது. இது வீரரின் அர்ப்பணிப்பு, பயிற்சி மற்றும் அனுசரணையாளரின் வலிமையைப் பொறுத்தே சாத்தியமாகியுள்ளது.

‘எங்களுக்கு அது போன்ற விளையாட்டு வீரர்கள் தேவை, இலக்குகளை அடைய கூடுதல் அர்ப்பணிப்பு செய்ய தயாராக உள்ளவர்கள், ஆர்வமும் நெகிழ்ச்சியும் கொண்டவர்கள் விளையாட்டுக்கு ஆதாரமாக உள்ளனர்.’ என அவன் தெரிவித்தார்.

‘Crysbroவுடன், இந்த நாட்டின் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும் செய்யவேண்டியவை அதிகம் இருந்தால், இந்த நாட்டின் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனைப் பார்த்து, கௌரவ அமைச்சரின் காலத்தில் செய்யப்பட்டது போலவும், விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச தரத்திற்குச் செல்லவும் உதவ வேண்டும். மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க உலகத் தடகள வீரர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.’ என சில்வா சுட்டிக்காட்டினார்.

‘நான் கவனித்த Crysbroவின் வெற்றி என்னவென்றால், அவர்கள் கிராமப்புறங்களில் தங்கள் வியாபாரத்தை மிகவும் சிரமத்துடன் தொடங்கினார்கள், இன்று அவர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நிறுவனத்தை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்கு அவர்களின் தலைவர் உட்பட குழு மிகப்பெரிய அர்ப்பணிப்பை செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, தலைவர் இந்த முன்னேற்றத்திற்கான தனது கனவை அடைந்தார். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் உள்ளது. முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் கனவை நனவாக்குங்கள்.’ என அவர் குறிப்பிட்டார்.

‘வீரர்கள் போராட வேண்டும், அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி தற்போதைய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாம் ஒரு நல்ல முடிவை பெற முடியும் என்று என்னால் சொல்ல முடியும். நான் சொல்ல விரும்பும் மற்றொரு விஷயம், குறைவாகப் பேசுவோம், கடினமாக உழைப்போம்.’

அலி சப்ரியின் சகோதரனையும் பதவி விலகுமாறு அழுத்தம்?

நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதியமைச்சர் அலிசப்ரியின் சகோதரர் மொஹமட் யுவேஸ், பெற்றோல் களஞ்சியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதை அடுத்து, நீதியமைச்சர் அலி சப்ரி அதிருப்தியடைந்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், அவரது சகோதர் மொஹமட் யுவேஸ் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு

0
நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான...

தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி

0
தேனிலவுக்கு மேகாலயா சென்றபோது, புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி...

லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: புலம்பெயர்ந்தோர்மீது கடும் நடவடிக்கை!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த கலவரத்தால், புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு போராட்டங்கள...