Home Blog Page 2691

Ideal Finance தனது கிளைகளை மேலும் விரிவுப்படுத்துகிறது

தனது வளர்ச்சியின் முக்கிய அங்கமாக Ideal Finance Limited (IFL) வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் முக்கியமான இடங்களில் நான்கு கிளைகளை திறப்பதன் மூலம் தனது வலையமைப்பை 17 இடங்களில் விரிவுப்படுத்தியிருக்கிறது.

IFL, புதிய 16 கிளைகளையும் சேர்த்து நடப்பு நிதியாண்டிற்குள் தனது கிளை வலையமைப்பை இரட்டிப்பாக்க திட்டமிட்டள்ளதாக முன்னர் அறிவித்தது. அதன்படி சுண்ணாகம,; நெல்லியடி, ஜா-எல மற்றும் கடுவலை ஆகிய இடங்களில் புதிய கிளைகளை திறந்துவைத்தது. இங்கு நிலையான வைப்புகள்,குத்தகை வசதிகள் மற்றும் தங்கக்கடன்கள் போன்ற நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

Ideal Financeஇன் துணை தலைவர்,அரவிந்த டி சில்வா, ‘முக்கிய கிராமப்புறங்கள், நகரங்கள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நகர்புற பகுதிகளில் Ideal Finance’s சரியான நேரத்தில் தனது கிளைகளை விரிவுபடுத்துவது எங்கள் சேவைகளை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக அணுக உதவுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதார மாற்றங்களிலிருந்து நிறுவனத்தைப் பயனடையச் செய்கிறது மற்றும் கிளை வலையமைப்பை வலுப்படுத்துவது நிறுவனத்தின் முன்னேற்றத்தினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என நாங்கள் நமபு; கிறோம்’ எனக் கூறினார்

IFL’sஇவ் புதிய கிளைகள் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக வளர்ச்சி சாத்தியமுள்ள வர்த்தக மையங்ககளில் திறப்பதன் மூலம் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் Mahindra மற்றும் Mahindra Financial Services Limited (MMFSL) ரூபா. 2 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டை செய்ததன் மூலம் இப்போது 58.2% பங்குகளுடன் Ideals Finance’sஇன் மிகப்பெரிய பங்குத்தாரராக உள்ளது. இது IFL நிறுவனத்தின் கீழ் 11 பில்லியன் USDக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் ஆதரவைப் பெறுகிறது. இது இலங்கையின் முழு வங்கித்துறையையும் விட அதிகமாகும்.

MMFSL இதிலிருந்து முதலீட்டைப் பெற்றதை தொடர்ந்து Ideal Finance, Fitch மதிப்பீட்டில் ‘BB-(lka)’ இருந்து ‘AA-(lka)’ஆக மேம்படுத்தப்பட்ட ஸ்த்திரத்தன்மைக்கு உயர்த்தபபட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் (March. 31. 2021 உடன் முடிவடைந்தது) தொற்று நோய் சமயத்திலும் தனது சிறநத் வருடாந்தர நிதிச் செயற்திறனை கொடுத்தது. அதன் முந்தைய ஆண்டின் அனைத்து முக்கிய நிதி குறிகாட்டிகளையும் மேம்படுத்துகிறது.வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 76% அதிகரித்து ரூபா.288.4 மில்லியனாக, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YOY), வரிக்கு பிந்தைய இலாபம் (PAT) 74% அதிகரித்து ரூபா. 183.8 மில்லியனாகக் குறைந்தது (YOY). முந்தைய வருடத்தில் 5.2%ஆக இருந்த Gross Non-performing Loans (NPL) விகிதம் 3.3%ஆக இவ் நிதியாண்டில் மேம்பட்டுள்ளது.

Ideal Finance Ltd (IFL) இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு NBFI ஆகும். 2021 மார்ச்சில்; கிராமப்புறங்களில் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும நகரங்களில் தெளிவான நோக்கத்துடன் செயல்பாடுகளைத் தொடங்கியது.

அதன் கடன் வசதிகளில் தங்கக்கடன்கள், SME கடன்கள், தனிநபர் கடன்கள், மோட்டார் கார்கள், முற்ச்சக்கர வண்டிகள், விவசாய வாகனங்கள் மற்றும் வியாபாரம் செய்யும் வாகனங்களுக்கான குத்தகை வசதிகள் உள்ளன.

வியாபாரத்தின் நிலையான வருடாந்தர வளர்ச்சியை பதிவு செய்யும் அதேவேளையில் ஒரு தரமான கடன் கொடுக்கும் வழியையும் IFL உருவாக்கியுள்ளது.

பட விளக்கம்
1. Ideal குழும, தலைவர் – நளின் வெல்கம
2. Ideal Finance துனைத் தலைவர் – அரவிந்த டி சில்வா
3. புதிதாக திறக்கப்பட்ட கிளைகள் சுண்ணாகம் நெல்லியடி, ஜா-எல மற்றும் கடுவலை

 

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக குறைவாக கதைத்து அதிகமாக வேலை செய்யும் இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா

சர்வதேச அளவில் வீரர்களை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு நல்ல பயிற்சியும், நம்பிக்கையும் அளிக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் அவர்களின் கனவை ஒருபோதும் கைவிடாமல், அவர்கள் விரும்பிய வெற்றியை அடைய முடியும்.

கலாநிதி பட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்காக கலாநிததி ஒருவரினால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் மூலம் படிப்படியாக கல்வியைப் பெற்றுக் கொள்வது போன்றதே சர்வதேச மட்டத்திலான போட்டிகளை எதிர்கொள்ளும் மெய்வல்லுநர் வீரர்களும் பல ஆண்டுகளாக படிப்படியாக சிறந்த அர்ப்பணிப்புக்களுடன் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை நோக்கி தம்மை அளவிட வேண்டுமென்றால் விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOC), விளையாட்டு அமைச்சு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தனியார் துறைகளிலிருந்தும் கூட்டு பங்களிப்பு இருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னேற வழியில்லாத கிராமப்புற விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட Crysbro Next Champ திட்டம், இலங்கையில் விளையாட்டு துறையில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லைக் குறித்தது என்று குறிப்பிட்ட திரு. மேக்ஸ்வெல் டி சில்வா, NOCSL Crysbro Next Champ Sports புலமைப்பரிசில் திட்டம் இலங்கையின் நீண்டகால விளையாட்டு முன்னேற்றத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு பொன்னான உதாரணம்.

அவர் மேலும் கூறுகையில், NOCSL Crysbro Next Champ திட்டத்தின் மூலம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அனுசரணை வழங்க முன் வந்த ஊசலளடிசழக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இலங்கையின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்ததைச் செய்ய தனியார் துறைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், மேலும் NOCSL Crysbro Next Champ உதவித்தொகை திட்டம் நாட்டின் விளையாட்டுத் துறையில் ஒரு திருப்புமுனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நாம் முன்னேறுவதை உறுதி செய்ய படிப்படியான திட்டமிடல் செயல்முறை இருக்க வேண்டும், முதலில், திறமையான விளையாட்டு வீரர்களை சரியான முறையில் அடையாளம் காண்பது இந்த செயல்பாட்டின் மிக முக்கியமான படியாகும். மேலும் அவரது குடும்பத்தினரின் ஆதரவும், வீரரின் அர்ப்பணிப்பும் வெற்றிக்கு பெரும் சக்தியாகும்.’ என சில்வா சுட்டிக்காட்டினார்.

இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி நடவடிக்கையிலிருந்து சாதனை வரை ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுசரணையாளராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் திரு. மேக்ஸ்வெல் டி சில்வா, இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இங்குள்ள பல விளையாட்டு வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்கள் விளையாட்டு வீரர்களின் நிதி, ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் அனைத்து விளையாட்டுத் தேவைகளையும் வழங்குகின்றனர்.

அத்துடன் தேசிய சம்மேளனத்தினால் விளையாட்டு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டியினால் மேற்பார்வை செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில், வீரர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் மற்றும் அலட்சியத்தால் ஏற்படும் காயங்கள் காரணமாக, அவர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பை சில்வா ஞாபகப்படுத்துகையில், 3 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு சர்வதேச அளவிலான வீரரை உருவாக்கியது. இது வீரரின் அர்ப்பணிப்பு, பயிற்சி மற்றும் அனுசரணையாளரின் வலிமையைப் பொறுத்தே சாத்தியமாகியுள்ளது.

‘எங்களுக்கு அது போன்ற விளையாட்டு வீரர்கள் தேவை, இலக்குகளை அடைய கூடுதல் அர்ப்பணிப்பு செய்ய தயாராக உள்ளவர்கள், ஆர்வமும் நெகிழ்ச்சியும் கொண்டவர்கள் விளையாட்டுக்கு ஆதாரமாக உள்ளனர்.’ என அவன் தெரிவித்தார்.

‘Crysbroவுடன், இந்த நாட்டின் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும் செய்யவேண்டியவை அதிகம் இருந்தால், இந்த நாட்டின் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனைப் பார்த்து, கௌரவ அமைச்சரின் காலத்தில் செய்யப்பட்டது போலவும், விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச தரத்திற்குச் செல்லவும் உதவ வேண்டும். மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க உலகத் தடகள வீரர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.’ என சில்வா சுட்டிக்காட்டினார்.

‘நான் கவனித்த Crysbroவின் வெற்றி என்னவென்றால், அவர்கள் கிராமப்புறங்களில் தங்கள் வியாபாரத்தை மிகவும் சிரமத்துடன் தொடங்கினார்கள், இன்று அவர்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நிறுவனத்தை இன்றைய நிலைக்கு கொண்டு வருவதற்கு அவர்களின் தலைவர் உட்பட குழு மிகப்பெரிய அர்ப்பணிப்பை செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, தலைவர் இந்த முன்னேற்றத்திற்கான தனது கனவை அடைந்தார். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் உள்ளது. முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் கனவை நனவாக்குங்கள்.’ என அவர் குறிப்பிட்டார்.

‘வீரர்கள் போராட வேண்டும், அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி தற்போதைய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாம் ஒரு நல்ல முடிவை பெற முடியும் என்று என்னால் சொல்ல முடியும். நான் சொல்ல விரும்பும் மற்றொரு விஷயம், குறைவாகப் பேசுவோம், கடினமாக உழைப்போம்.’

அலி சப்ரியின் சகோதரனையும் பதவி விலகுமாறு அழுத்தம்?

நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதியமைச்சர் அலிசப்ரியின் சகோதரர் மொஹமட் யுவேஸ், பெற்றோல் களஞ்சியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதை அடுத்து, நீதியமைச்சர் அலி சப்ரி அதிருப்தியடைந்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், அவரது சகோதர் மொஹமட் யுவேஸ் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

சீனி மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்! அமைச்சர் பந்துல அறிவிப்பு

ச.தொ.ச விற்பனை நிலையங்களில் இன்று முதல் சீனி மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ச.தொ.ச விற்பனை நிலையத்தில் ஐந்து பொருட்கள் வாங்கும் பட்சடத்தில் மட்டுமே 3 கிலோ சீனி கொள்வனவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்திருந்ததுடன், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று முதல் ச.தொ.ச. விற்பனை நிலையங்களில் சீனி மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிததுள்ளார்.

‘பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்’ – கொலையென உறுதி! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

சப்புகஸ்கந்த பகுதியில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட பின்னரே அவ்வாறு வீசப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், கொலையாளிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 44 வயதுடைய முஸ்லிம் பெண்ணொருவர், கடந்த 28 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

கொழும்பு, புளுமண்டல் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் மற்றும் அவரின் சகோதரர் சகிதமே குறித்த பெண் ஆட்டோவில் பயணித்துள்ளார்.

இந்நிலையில் சப்புகஸ்கந்த எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கழிவுப் பொருட்களுடன் காணப்பட்ட பயணப் பைக்குள் இருந்து அவர் நேற்று முன்தினமாக சடலமாக மீட்கப்பட்டார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீடக்ப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர். இப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவருடன் பணித்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர். உயிரிழந்துள்ள பெண் வட்டிக்கு பணம் கொடுப்பவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

விரைவில் அமெரிக்கா பறக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, இம்மாதம் நடுப்பகுதியில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடலினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ள போதும் அதற்குரிய திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காக கொண்டு நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

டியூ குணசேகரமீது அரசியல் போர் தொடுத்தது மொட்டு கட்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரின் அமைச்சரவையையும் கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகரமீது, சரமாரியாக சொற்கணை தொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்பதே எனது கருத்து. சுதந்திரத்துக்கு பிறகு உருவான முட்டாள் தனமான அமைச்சரவையே இது. மடத்தனமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.” – என்று டியூ குணசேகர அரசுமீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கருத்து வெளியிட்டுள்ளார்.

” டியூ குணசேகர என்பவர் பலவீனமான அரசியல் கட்சித் தலைவர். கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தவர். கோப் குழுவின் தலைவராக இருந்தால் எதனையும் செய்யவில்லை. அவர் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.”- என்றார்.

ஓரணியில் திரளும் தொழிற்சங்கங்கள்! இருளில் மூழ்குமா இலங்கை?

தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, பல தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து, எதிர்வரும் தினங்களில் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள், துறைமுகம் மற்றும் மின்சார ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்சாரம், துறைமுகம், எரிபொருள், தேசிய நீர் வழங்கல் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பங்குப்பற்றுதலுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதன்படி மின்சார ஊழியர்கள் ஈடுபடும் பணி புறக்கணிப்பில் ஈடுபடும் பட்சத்தில், நாட்டின் மின்சார விநியோகம் தடைபடக்கூடும். ஏற்கனவே இது தொடர்பில் தகவல்கள் வெளியானமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களால் டெஸ்ட் தொடரை ஒத்திவைத்த ஆஸி.

அவுஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் மோதியதில்லை. முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் இந்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

இப்பேட்டியைக் காண ஆப்கானிஸ்தான் இரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த போட்டியை அவுஸ்திரேலியா ஒத்தி வைத்துள்ளது. தலிபான்களே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் போய் விட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவி செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே தலிபான்கள் கூறி விட்டார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தலிபான் மூத்த தலைவர் கூறினர்.

இதையடுத்தே ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா ஒத்தி வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் தடை விதித்தால் அந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தம் இல்லை.

இதனால்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஹோபர்ட் டெஸ்ட் போட்டியை தள்ளி வைத்துள்ளோம் என்றனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தால், அந்த நாட்டு அணியுடனான டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரி- 20 தொடரில் புதிய சாதனையை நிலைநாட்டிய வனிந்து ஹசரங்க

ரி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி வீரர் ஹசரங்க புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

7 ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனால் நடப்பு உலக கோப்பை தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹசரங்க படைத்தார். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

பொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு சிக்குன்குனியா

0
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சேவையாற்றும் 06 ஊழியர்கள் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வார காலப்பகுதிக்குள்ளேயே இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு இன்று...

வவுனியாவில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவுடன் 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...