Home Blog Page 3952

இராணுவ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா – பதுளையில் 116 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தியத்தலாவைக்கு வந்திருந்த இராணுவத்தினர் இருவர், தமக்கான உடைகளை தியத்தலாவை தையல் நிலையமொன்றில்  கடந்த 11 ஆம் திகதி தைத்துச் சென்றிருந்தனர்.  இவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தியத்தலாவையிலுள்ள குறித்த தையல் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் ஏழு பேரும் இன்று (15) பிற்பகல் 2.30 மணியளவில் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இப் பரிசீலனை நிறைவுற்றதும்,  அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குற்படுத்துவது அல்லது அங்கொடை கோவிட் 19 தொற்று அரசினர் மருதுவமனைக்கு அனுப்புவது குறித்தும் தீர்மானிக்கப்படும் என்று பதுளை அரசினர் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவ அதிகாரிகள் மூவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அம் மூவருடன் தொடர்புடைய 116 பேர் பதுளை பகுதியில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவிட் 19 தொற்றுக்குள்ளான மூவரும் பசறை, பதுளை, மஹியங்கனை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களாவர். இவர்கள் விடுமுறை பெற்று தமது வீடுகளுக்கு வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. பசறை பகுதியை சேர்ந்தவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்.

எம்.செல்வராஜா பதுளை

முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் முத்தையா பிரபுவை விளாசித் தள்ளிய சஜித்

” பந்தையும், துடுப்பு மட்டையையும் வழங்கி வாக்கு கேட்பவர்களை நம்பவேண்டாம். இனவாதிகளுடன் இணைந்தே அவர் போட்டியிடுகின்றார். அத்தகையவர்களுக்கு வாக்களித்தால் மலையகத்தில் மாற்றம் ஏற்படாது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும்,  நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் 15.07.2020 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மதியம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவரோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையக மக்களுக்கு எனது தந்தையே குடியுரிமை வழங்கினார். அதன்பின்னர் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் மட்டும் அம்மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாது. தனக்கென காணி, வீடு அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மேம்படவேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என நம்பக்கூடியதாக இருக்கும்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வருமானம் உழைக்ககூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மலையகத்துக்கு அமைச்சுப் பதவி மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களின் நலன்புரி, அபிவிருத்தி உட்பட இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விசேட செலயணியொன்று அமைக்கப்படும். அது பிரதம அமைச்சரின் கண்காணிப்பின்கீழ் செயற்படும். திகாம்பரம் உள்ளிட்டவர்களும் அதில் இருப்பார்கள்.

பெட், போல் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கிவிட்டு வாக்குபெறலாம் என சிலர் நினைக்கின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரரை அவமதித்த வேட்பாளர் அங்கம் வகிக்கும் இனவாத கூட்டணியிலேயே இவரும் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்களிப்பதால் மலையகத்தில் மாற்றம் வரப்போவதில்லை. எனவே, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த அரசாங்கத்திடம் பொருளாதார திட்டங்கள் இல்லை. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. நாம் ஆட்சிக்கு வந்ததும் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பதுடன், உடனடியாக எரிபொருள் விலையும் குறைக்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

மலையகத்துக்காக விசேட செயலணி – சஜித் உறுதி!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டபிள்யூ. மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“மலையக மக்களுக்கு எனது தந்தையே குடியுரிமை வழங்கினார். அதன்பின்னர் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் மட்டும் அம்மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாது. தனக்கென காணி, வீடு அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மேம்படவேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என நம்பக்கூடியதாக இருக்கும்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வருமானம் உழைக்ககூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மலையகத்துக்கு அமைச்சுப் பதவி மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களின் நலன்புரி, அபிவிருத்தி உட்பட இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விசேட செலயணியொன்று அமைக்கப்படும். அது பிரதம அமைச்சரின் கண்காணிப்பின்கீழ் செயற்படும். திகாம்பரம் உள்ளிட்டவர்களும் அதில் இருப்பார்கள்.” -என்றார். 

 

இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,001 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,OO1 ஆக அதிகரித்துள்ளது.

653  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 665 ஆக இருக்கின்றது.

நீரோடையில் மிதந்து வந்த சிசுவின் சடலம் வெலிமடையில் மீட்பு

நீரோடையில் மிதந்து வந்த பிரசவமான ஒரு தினத்தைக் கொண்ட பெண் சிசுவொன்றின் சடலத்தை, வெலிமடைப் பொலிசார் இன்று (15) மீட்டுள்ளனர்.

வெலிமடைப் பகுதியின் வக்கடஹின்ன நீரோடையிலேயே, மேற்படி சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வக்கட ஹின்ன நீரோடை நுவரெலியா எல்லையிலிருந்து ஆரம்பித்து, வெலிமடைப் பகுதியின் உமா ஓயா ஆற்றில் சங்கமமாகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்த சிசுவின் தாயைத் தேடி பொலிசார் தேடுதல் செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும், விரைவில், சிசுவின் தாயைக் கண்டுபிடித்து கைது செய்ய முடியுமென்று, வெலிமடைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எய்ச்.எம். ஹேரத் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிசு, கதகதப்பான உடையிலும் பொலிதினினாலும் சுற்றப்பட்ட நிலையிலிருந்ததாகவும், கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்துமே, மீட்கப்பட்டதாகுமென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை.

அஞ்சல் வாக்கு சீட்டை படமெடுத்தவர் கைது!

மொனராகலை,  தனமல்விலை இ.போ.ச. டிப்போ செயலகத்தில் அஞ்சல் வாக்கினை செலுத்திய நபரையும், அஞ்சல் வாக்குச் சீட்டையும் தொலைபேசிமூலம்  படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தனமல்விலை இ.போ.ச. டிப்போ பணியகத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த தேர்தல் உத்தியோகத்தர்கள், கடமையிலிருந்த பொலிஸாரின் உதவியுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதுடன், படம் எடுக்கக் கூடாதென்று தமக்குத் தெரியாதென்றும், தனக்கு மன்னிப்பு வழங்கும்படியும் வினயமாக கேட்டுக் கொண்டதற்கமைய, எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், குறிப்பிட்ட புகைப் படங்களை கையடக்கத் தொலைபேசியிலிருந்து அகற்றப்பட்டது.

எம். செல்வராஜா, பதுளை

மொனராகலையில் இருவருக்கு கொரோனா – 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மொனராகலை மாவட்டத்தில் கொவிட் –  19 தொற்றுடையதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மொனராகலை சுகாதார சேவைப் பணிப்பாளர் பி.பி.கே. அதிகாரி இன்று 15-07-2020 தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“மொனராகலை மாவட்டத்தில் எத்திமலை, சியாம்பலாண்டுவை ஆகிய பகுதிகளின் கோவிட் 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட ஐவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் நோய்த் தொற்றுக்கிழக்காகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவருக்கும் நோய்த் தொற்று இல்லையென்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.

அத்துடன், கோவிட் 19 தொற்றுடையவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 68 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் எட்டுப் பேர் அரச தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதுடன் ஏனைய 60 பேர் சுய தனிமைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொதுமக்கள் அனைவரும், கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுமாறும், பொதுமக்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா பதுளை

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த கருவி – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

சவுதிஅரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாகக் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.

இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.இது குறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாக கூறினார். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது.

இதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருக்கடியான தருணத்திலும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழ் ஆசிரியர் சமூகத்துக்கு செந்தில் தொண்டமான் பாராட்டு!

கொவிட் 19 வைரஸ் பரவல் குறித்த நெருக்காடியான சந்தர்ப்பத்திலும் ஊவா மாகாணத்தில் வாக்களித்த அனைத்து தமிழ் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றித் தெரிவித்துள்ளார்.

ஆளும் மற்றும் பொதுத் தேர்தலின் பின் அமையபோகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் பலம்வாய்ந்த அமைச்சுப் பதவியை இ.தொ.காவுக்கு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஆசிரியர் சமூகம் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

ஊவாவில் குறைப்பாடாக காணப்படட விஞ்ஞானப் பாடசாலையை உருவாக்கி வைத்தித்துறை கற்க பெருந்தோட்டப் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது போன்று கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை என பெருந்தோட்ட சமூகம் பரந்தப்பட்டளவில் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கணித விஞ்ஞானக் கல்லூரிகளை அமைத்து அங்கும் பல வைத்தியர்களை உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

நான் செய்வதை மட்டுமே சொல்வேன். அதேபோன்று சொல்வதை மற்றுமே செய்பவன். ஏனைய அரசியல் வாதிகள் போன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுபவன் அல்ல. புதிய அரசாங்கம் அமைய பெற்றதும் முதல் பணியாக ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை செய்துமுடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

‘மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மொட்டு ஆட்சி மலரும்’

அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பலம்வாய்ந்த அரசாங்கமொன்று அமைக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும: கூறியவை வருமாறு,
” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமது அணிக்கு கிடைத்த வாக்குகளை அடிப்படையாகவைத்து பார்த்தால்  126 ஆசனங்கள் இலகுவில் கிடைத்துவிடும். அதேபோல் நுவரெலியா, வவுனியா , திருகோணமலை மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களையும் கைப்பற்றினால் அதன்மூலமும் ஆசனங்கள் கிடைக்கும்.
மறுபுறத்தில் கொழும்பு, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் கடந்தமுறையைவிட மூன்று ஆசனங்கள் அதிகம் கிடைக்கும். அத்துடன், அம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களில் இரண்டு ஆசனங்களை அதிகமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
மொனறாகலை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல் இருக்காது. ஆக அடிப்படைவாதிகள் இல்லாத பலமானதொரு அரசாங்கத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கும்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...