Home Blog Page 3953

இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன் தேர்தல் – சு.க. யோசனை!

உரிய திகதிக்கு முன்னர் தேர் தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய லாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கோரிக்கை விடுத்தார்.

18 ஆம், 19 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெறுமாக இருந்தால், 25ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பிரச்சினை அதிகரிக் கின்றது. நாம் கூட்டங்களுக்குச் செல்கின் றோம். மக்கள் கூட்டங்களுக்கு வருகின் றனர். நாம் மக்களுடன் நடமாடுகின் றோம். வேட்பாளர்களில் ஒருவர் அல் லது இருவருக்கு தொற்று ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்களைத் தனி மைப்படுத்த வேண்டி ஏற்படும். அதன் போது, தேர்தல் அல்ல எதனையும் செய்ய முடியாமல் போகும்.

எனவே, நான் யோசனையயான்றை முன்வைக் கின்றேன். வர்த்தமானியை மாற்றிய மைத்து 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

சலுகைகளுக்கு அடிபணிந்து ‘டீல்’ அரசியல் நடத்தமாட்டோம்!

“ஐக்கிய தேசியக்கட்சியுடன் எமக்கு எவ்வித ‘டீல்’ அரசியலும் கிடையாது.” – என்று ஜே.வி.பியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கருஜயசூரிய போட்டியிட்டிருந்தால் தமது வேட்பாளரை தேசிய மக்கள் சக்தி விலக்கிக்கொள்ளவிருந்தது என முன்வைக்கப்படும் கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். எமது அணியே முதலாவதாக மக்கள் மத்தியில் வேட்பாளரை அறிவித்தது. பின்வாங்குவதற்காக இருந்தால் எதற்காக அறிவிப்பு விடுக்கவேண்டும்?

அதேபோல் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பிலும் எம்மை தொடர்புபடுத்தி சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இரண்டாம் வாக்கை இவருக்கு வழங்குமாறு எவரின் பெயரையும் நாம் பரிந்துரைக்கவில்லை. கற்பனை அடிப்படையிலேயே இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. மக்களுக்காக கொள்கை அடிப்படையிலேயே அரசியல் நடத்திவருகின்றோம். மக்கள் பக்கம்நின்று தீர்மானங்களை எடுப்போமேதவிர சலுகைகளுக்காக ஒருபோதும் அடிபணிந்து முடிவுகளை எடுத்ததில்லை. இனி எடுக்கபோவதுமில்லை.

நாம் உயிரை பணயம் வைத்து அரசியல் நடத்துகின்றோம். ஆனாலும் எமது பயணத்தை தடுப்பதற்கும், மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்புவதற்காகவுமே என்ஜிஓ, டொலர் போன்ற கதைகள் எல்லாம் கூறப்பட்டுவருகின்றன.

நாடாளுமன்றத்தில் நாம் பலமான சக்தியாகவேண்டும். அதற்கான ஆணையையே மக்களிடம் கேட்கின்றோம்.” – என்றார்.

மலையக இளைஞர்களை இன்று சந்திக்கிறார் சஜித்

மலையக  இளைஞர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு, ஹட்டன் டி.கே. டபிள்யூ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசனே இதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. எனவே, கட்டாயம் பங்கேற்று பயன்பெறுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலையக குருவியின் செய்திக்கு சிவநேசன் மறுப்பு – பொலிஸில் முறையிடவும் நடவடிக்கை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக மலையக குருவியில் வெளியான  செய்திக்கு மேற்படி சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா சிவநேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடொன்றை அடிப்படையாகக்கொண்டு குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் எவ்வித உண்மையும் இல்லை என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் கீழே விழுந்ததால்தான் நபரொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

” சம்பவம் நடைபெறும்போது நான் பங்களாவுக்குள்தான் இருந்தேன். சத்தம் கேட்டதும் என்ன நடந்தது என பார்வையிட சென்றேன். ஆனால், மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுவதெல்லாம் பொய்யாகும்.” எனவும் கூறினார்.

மலையக குருவி வெளியிட்டிருந்த செய்தி வருமாறு,

கட்சிக்குள் சண்டை – சிவா, பத்மா முட்டி மோதல்!உடைந்தது ஒருவரின் மண்டை!!

உலகளவில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 77 லட்சம் பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 76 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 32 லட்சத்து 36  ஆயிரத்து 80  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 77 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

80 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? பதிலடி கொடுத்தார் ரமேஷ்

நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 5 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள். அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானே அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். அப்போது தெரியும் ஜீவன் தொண்டமான் பெரியவரா? சிறியவரா என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நோர்வூட் நியுவெளி தோட்டத்தில் 14.7.2020 நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழும் சூழலை ஏற்ப்படுத்திக் கொடுத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான். நீங்கள் இன்று பிரதேச சபைகளிலோ,மாகாண சபைகளிலோ, பாராளுமன்றத்திலோ இருப்பதற்கு வாக்கு உரிமையை பெற்றுக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே.

அதனை இன்று சிலர் மறந்துவிட்டு வாய்க்கு வந்ததை பேசி திரிகின்றனர். வாய்க்கு வந்ததை பேசுபவர்கள் நல்ல தலைவர்களாக இருக்க முடியாது. முதலில் குறை கூறும் அரசியலை நிறுத்துங்கள். 1000 ரூபா சம்பளத்தை வைத்து அரசியல் நடத்த சிலர் முனைகின்றனர்.

1000 ரூபா சம்பளம் நிச்சயமாக கிடைக்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாங்கள் 80 வருடங்கள் என்ன செய்தோம் என்கின்றனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்ததை பட்டியலிட்டு காட்ட இயலாது. எண்ணில் அடங்காத சேவைகளை செய்துள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளை அனைத்தையும் பெற்றுக்கொடுத்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். அதனை முழு மலையகமும் நாடும் அறியும்.

நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ்வதற்கு சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். வருடத்தில் ஆறாவது மாதமும் பன்னிரண்டாவது மாதமும் கூடும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இல்லை.

மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் மாபெரும் அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். எனவே இன்று நாம் செல்லும் மக்கள் சந்திப்புக்கெல்லாம் அலை அலையாய் இளைஞர்கள் கூடுகின்றார்கள். ஜீவன் தொண்டமானின் தலைமத்துவத்தை இன்று இளைஞர்கள் முதல் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவே நாங்கள் 5 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெறுவது உறுதி என்றார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

எக்காரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது!

“எந்தகாரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது.இடர்நிலைமை காணப்படின் அந்த பிரதேசத்தில் பிரிதொரு நாளில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமுண்டு. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் வாக்களிப்பதற்கு தயாராகவேண்டும்.”

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானியை வெளியிடுமாறு சுகாதார தரப்பிடம் நாம் கோரியுள்ளோம். ” என்றும் அவர் கூறினார்.

கட்சிக்குள் சண்டை – சிவா, பத்மா முட்டி மோதல்!உடைந்தது ஒருவரின் மண்டை!!

தொழிலாளர் தேசிய  சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவருக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் நேற்று அடிதடியும் அரங்கேறியுள்ளது. இதனால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசனுக்கும், பத்தாவுக்குமிடையிலேயே இவ்வாறு கடும் மோதல் மூண்டுள்ளது.

நிதி கொடுக்கல் –  வாங்கல் தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாடு காரணமாகவே இம்மோதல் இடம்பெற்றுள்ளது என்று ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் காசல்ரீயிலுள்ள விடுதியொன்றில் நேற்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமாரும் கலந்துகொண்டுள்ளார்.

சிவநேசனுக்கும், பத்மாவுக்குமிடையில் நிதி கொடுக்கல், வாங்கல் தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு முடிவு கட்டி, சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் குறித்த சந்திப்பில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார், பத்மாவை அழைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளார்.

அவ்வேளையில் சிவநேசன் தரப்பால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் பத்மாவின் சாரதி படுகாயமடைந்தார் எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவநேசன் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் பத்மா தரப்பால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சி தலைமைப்பீடத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 1,988 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 07 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

647 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 646 ஆக இருக்கின்றது.

‘1000 ரூபா முக்கியமல்ல – சஜித் முன்வைத்துள்ள புதிய யோசனை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் கூலியை அதிகரிக்க விடாமல் செய்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் அப்போதைய பிரதமர் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

ஊடகப் பிரதானிகளைக் கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (13) காலை சந்தித்துக் கலந்துரையாடும்போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நீங்கள் அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள அதிகரிப்பை அமைச்சரவையில் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை.  அப்படியிருக்கையில் என்ன அடிப்படையில் 1,500 ரூபாய் நாள் கூலி வழங்குவேன் என உறுதியளித்தீர்கள்?” எனக் கேட்கப்பட்டபோது,

“அப்போதைய அமைச்சரவையில் நானும், அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ராஜித சேனாரத்ன போன்றவர்களுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்திச் சண்டை பிடித்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமான அச்சம்பள அதிகரிப்புச் சாத்தியப்படவில்லை.

இதனைப் பெற்றுக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாகச் செயற்பட்டவர்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்தான். அவர்கள்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரையில் சம்பள அதிகரிப்பு ஆயிரமா, ஆயிரத்தி ஐநூறா என்பதல்ல முக்கியம். பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து, தோட்டத்துறையை மேம்படுத்துவதனூடாகவே அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

அந்நிலையை உருவாக்கினால், 1,500 ரூபாய் சம்பளம் என்பதே தேவைப்படாது. அனைவரும் பொருளாதாரத் திருப்தியுள்ளவர்களாக மாறிவிடுவார்கள்” என, சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக பெண் இராணுவ தளபதி நியமனம் !

0
125 வருடகால ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதன்முறையாக இராணுவ தளபதி பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத் திறன்களுக்கான தளபதியாக (Chief of Joint Capabilities) பதவி வகிக்கும் சூசன் கோய்ல் (Susan Coyle), புதிய...