Home Blog Page 3954

தலைதூக்கும் தேர்தல் வன்முறை – அனுசாவின் வாகனங்கள்மீதும் தாக்குதல்

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச்சம்பவங்களும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபுவின் வாகனங்கள்மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தின் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரான  அனுசா சந்திரசேகரனின் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்பட்டுவந்த வாகனங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகரப்பத்தனை பொலிஸ் நிலையம், நுவரெலிய மாவட்ட பொலிஸ் காரியாலயம், தேர்தல் ஆணையகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையக மகக்ள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணனின் அடியாட்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர் என அனுசா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை’

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானே அமைச்சர் – திகாம்பரம் சூளுரை

மலையக மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் நடத்துகின்றோம். எனவே, எமக்கான ஆதரவை வழங்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்துடன், என்னையும், மனோவையும், ராதாவையும் எவராலும் ஏமாற்றமுடியாது. நாங்கள் மூவரும் இல்லாவிட்டால் மலையக மக்களை ஏமாற்றிவிடுவார்கள். அதற்கு இடமளிக்கவேண்டும் எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். திகாம்பரம் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர் எனது அமைச்சு பதவியும் பறிபோய்விட்டது. இதனால் அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் வீட்டுதிட்டங்களும் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பிறகு நான்தான் அமைச்சராவேன். உங்களுக்காக முன்னெடுத்த அனைத்து சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பேன்.

மலையகத்தில் இவ்வளவுநாள் இருந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? நானும், மனோவும், ராதாவும் இணைந்த பின்னர் குறுகிய காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருந்தது. அந்த மன திருப்தியுடனேயே வாக்கு கேட்டுவந்துள்ளோம். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அப்போதுதான் சமுகத்துக்காக பேரம் பேசும் பலமும் அதிகரிக்கும்.

நாம் ஒருபோதும் மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே பதவிகளை ஏற்றோம். நான் எமது மக்களுக்காக குருவிகூடையாவது கட்டிக்கொடுத்துள்ளேன். சின்ன பையன் என்ன செய்துள்ளார்?

நான் அமைச்சராக இருந்தபோது 2 தடவைகள் 3000 ரூபா வாங்கிக்கொடுத்தேன். 5 ஆயிரம் ரூபா முற்கொடுப்பனவு பெற்றுக்கொடுத்தேன். கட்சி சார்பாக அல்லாமல் பெருந்தோட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இத்தொகைகள் கிடைத்தன. ஆனால், இந்த அரசாங்கம் கட்சி பார்த்தும், ஆட்கள் பார்த்துமே 5 ஆயிரம் ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்குகின்றது. இது பெரும் அநியாயமாகும். எனவே, அரசாங்கத்துக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி தக்கபாடம் புகட்டவேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘இரத்தினபுரியில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பேன்’

இரத்தினபுரி வாழ் அனைத்து மதத்தவர்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நாற்சதுர சுவிசேஷ சபையின் போதகர் தேவ குமாரனை சந்தித்து ஆசிப் பெற்றுகொண்டதை அடுத்து, இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் இதுவரை பாதுகாக்கப்படாத நிலையில், அவர்களின் மத சுதந்திரத்திற்கும் தற்போது அச்சுறுத்தலான நிலைமைகள் காணப்படுவதாக தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் இல்லாமையே சிறுபான்மை சமூகம் தமது உரிமைகளை விட்டுகொடுக்க காரணம் என கூறிய அவர், இனி இரத்தினபுரி வாழ் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவளனாவும், அவர்களின் குரலாகவும் தான் முன்னிற்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இதுவரை சிறுபான்மையினரால் இழக்கப்பட்டு வந்த உரிமைகளை தான் இனி ஒருபோதும் அவர்கள் இழப்பதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் ஊடாக, சிறுபான்மை சமூகத்தின் மதத் தலங்களின் மேம்பாட்டை துரிதப்படுத்த நிதியுதவிகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவிரல் புரட்சிமூலம் பலத்தை காட்டுவோம்!

“வாக்கு என்பது எமது பலம். உரிமைகளை வென்றெடுப்பதற்கான பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதம். எனவே, சலுகைகளுக்காக அந்த உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதுடன் தவறான நபர்களுக்கு ஆரவளிக்கும் வகையில் பயன்படுத்தவும்கூடாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தி மக்களிடமே இருக்கின்றது. அந்த மக்கள் சக்திக்கு முன்னால் அரசியல் ரீதியிலான ஏனைய சக்திகள் எல்லாம் இரண்டாம்நிலைதான். எனவே, தமது வாக்குபலத்தின் முக்கியத்துவத்தை மக்கள் இம்முறை நிச்சயம் உணர்த்தவேண்டும். ஒரு விரல் புரட்சிமூலம் சமுக முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை இத்தேர்தலில் இடவேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் முன்வைத்தே நாம் வாக்கு கேட்கின்றோம். குறிப்பாக மலையகத்தில் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டவேண்டும் என்பது எமது முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். எமது சமுகம் முன்நோக்க பயணிப்பதற்கு மதுபாவனையும் ஒரு தடையாக உள்ளமை கசப்பான உண்மையாகும். எனவேதான் மாற்றத்துக்கான எமது பயணத்தில் அதற்கும் முடிவு கட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், எமது மக்கள் சாராயத்துக்கும், சோத்து பார்சலுக்கும் அடிமையானவர்கள் என நினைத்துக்கொண்டு, அவற்றை வழங்கி வாக்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமது அரசியல் இலாபத்துக்காக சமுதாயத்தை சீரழிப்பதற்குகூட அவர்கள் துணிந்துவிட்டனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம்.

மலையகம் இன்று விழித்துக்கொண்டுள்ளது. சாராயத்தையும், சோத்து பார்சலையும் வழங்கினால் சாதித்துவிடலாம் என நினைப்பது வெறும் மாயையாகும். அந்த குறுக்குவழி அரசியல் பயணத்தை இன்றைய இளைஞர்கள் எதிர்க்கின்றனர்.  எனது சமுகம் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு முயற்சிக்கின்றது. எனவே, எமது சமுகத்தை தவறாக எடைபோடும் நபர்களுக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி தக்கபாடம் புகட்டுவார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியால்தான் மலையகத்தில் மறுமலர்ச்சினை ஏற்படுத்தமுடியும். அதற்கு எம்மைபோன்ற புத்தாக்க சிந்தனைகொண்ட, புது யுகம் தொடர்பில் தூரநோக்கு சிந்தனைகொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நிச்சயம் வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.” – என்றார்.

ஐஸ் போதைப்பொருளுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது!

கொழும்பு, வத்தளை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளாக வருகைதந்த நால்வரிடமிருந்து ஐஸ் போதைபொருள் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் உள்ள விடுதியொன்றுக்கு முன்னால் வைத்தே நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் இருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்

மலையகத்தில் வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்!

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் வாழும் வாக்காளர்களுக்கு, தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

அதன் முதல் கட்டமாக இன்று (14)  ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர். தேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – சுகாதார அமைச்சின் தரவுகள் குறித்து பலத்த சந்தேகம்!

கொவிட் – 19 தொடர்பில் சுகாதார அமைச்சால் வெளியிடப்படும் தரவுகள் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை நம்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” கொரோனா வைரஸ் குறித்து ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்ப் பிரிவும் பரிசோதனைகளை நடத்திவந்த நிலையில், அங்கு உரிய முறையில் பரிசோதனை  நடைபெறுவதில்லை என குறிப்பிட்டு, அந்த விசாரணைப் பிரிவை,,  சுகாதார அமைச்சு நீக்கியது.

இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரவியபோது கடந்த ஏப்ரல் மாதம் எனக்கும், மைத்திரிக்கும் குறித்த  பல்கலைக்கழகத்தின் பரிசோதனை பிரிவே, கொரோனா பரவியுள்ளதா என பரிசோதனை நடத்தியது. முடிவு வெளியானதும், எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது. அவர்களின் பரிசோதனை பிழையெனில் எனக்கு நோய் ஏற்பட்டிருக்கவேண்டும்.

குறிப்பாக ஜிந்துபிட்டியவில் இருந்து ஒருவர் அழைத்துவரப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என பல்கலைக்கழகத்தின் பரிசோதனை பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு இல்லை. அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பதிவிடுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் உடன்படிவில்லை.

நான் கூறும் இந்த விடயம் தவறெனில் உரிய விளக்கத்தை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றேன். எண்ணிக்கையை குறைத்துக்காட்டுமாறு வலியுறுத்தப்பட்டதாக பல்கலைககழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.

உலகில் ஏனைய நாடுகள் பரிசோதனைகளை அதிகரித்துவருகின்றன. ஆனால், இங்கு இருந்த விசாரணைப்பிரிவையும் அகற்றியுள்ளனர். எனவே, சுகாதார அமைச்சு என்ன செய்கின்றது என்ற வினா எழுகின்றது. குறித்த அமைச்சால் வழங்கப்படும் தரவுகள் சரியானவையா என்பதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தரவுகளை ஏற்கமுடியுமா? இன்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த அச்சநிலையை மட்டுமே மொட்டு அரசால் உருவாக்கமுடிந்தது.” – என்றார்.

முரளிக்கு பதிலடி கொடுத்தார் மனோ!

“இலங்கை அணியில் போராடிய தன் சக நண்பர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்காக கூட வாய் திறக்காத முரளி, இப்போது விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். வாழ்க!” -என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் விமல்வீரவன்ஸவை ஆதரித்து நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய முத்தையா முரளிதரன்,

” இவ்வளவு காலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

” ஆம், முத்தையா முரளிதரன்! கொழும்பு உட்பட நாடு முழுக்க வாழும் தமிழருக்காக நான் “ஒன்றுமே செய்யவில்லை!”

ஆகவே கொழும்பில் வாழும் தமிழர்கள் எல்லோரும், இங்கே கொழும்பில் போட்டியிடும் “தலைவர்” விமல் வீரவன்சவுக்கே வாக்களிப்போம்!

அவர் தமக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று சொன்னாலும்கூட, நாம் அவருக்கே வாக்களிப்போம்!

இலங்கை அணியில் போராடிய தன் சக நண்பர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்காக கூட வாய் திறக்காத முரளி, இப்போது விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். வாழ்க!” – என்றார்.

‘மனோ ஒன்றும் செய்யவில்லை – அவருக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்’? – முரளி

” இவ்வளவு காலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு வர்த்தக சங்கத்துடன் நடைபெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வினா எழுப்பினார்.

நாட்டுக்கு உயிரூட்டும் கொழும்பு 19 எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய முத்தையா முரளிதரன் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் எனக்குமிடையில் 20 வருடங்களாக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அவர்களே வெற்றிபெறபோகின்றனர். அவர்கள் தலைமையிலேயே ஆட்சி அமையப்போகின்றது.

நான் அரசியல்வாதி கிடையாது.  அரசியலுக்கு வரவும்மாட்டேன். பணம் சம்பாதிக்கவேண்டிய தேவையும் இல்லை.  ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சமுக சேவகராகவும் மரணிக்கவே விரும்புகின்றேன்.

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்குமாறும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி என்னிடம் கோரிக்கை விடுத்தார். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதால் ஏற்கவில்லை. ஆளுநர் பதவியையும் வேண்டாம் என்றேன்.

இவ்வளவுகாலமும் இருந்த மனோ கணேசன் ஒன்றும் செய்யவில்லை. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் எதற்காக மீண்டும், மீண்டும் அவருக்கு வாக்களித்து ஏமாறவேண்டும்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக பெண் இராணுவ தளபதி நியமனம் !

0
125 வருடகால ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதன்முறையாக இராணுவ தளபதி பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத் திறன்களுக்கான தளபதியாக (Chief of Joint Capabilities) பதவி வகிக்கும் சூசன் கோய்ல் (Susan Coyle), புதிய...