Home Blog Page 47

புலி டயஸ்போராக்களுக்காகவே சுரேஷ் சலே கைது: விமல் குற்றச்சாட்டு!

“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.”
என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச மேற்படி தகவலை வெளியிட்டார்.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் சலே ஒருநாள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது முக்கிய தகவலொன்றை வெளியிடுவார்.

அடுத்த வாரம் விசேட இலக்கு இருப்பதாகவும், விமானப்படையின் தாக்குதல் விமானமொன்றை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்குமாறு கூறி இருந்தார்.

இதற்கமையவே தமிழ்ச்செல்வன் இருந்த இடம்மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழ்ச் செல்வனுடன் இருக்கும் நபர் ஒருவர் ஊடாகவே அந்த உளவு தகவல் பெறப்பட்டிருக்கும்.

எனவே, தமிழ்ச் செல்வனுடன் இருந்தவருடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருந்தது என்பதற்காக அவரை புலியென கூற முடியுமா?

புலனாய்வு பிரிவு என்றால் அனைத்து தரப்புடனும் தொடர்பு இருக்கும்.” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

2025-இல் 7,667 புலம்பெயர் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில், பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர் முயன்றவர்களில் 7ஆயிரத்து 667 பேர் உயிரிழந்ததோடு, பலர் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பூா்வ புலம்பெயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் கும்பல்களின் பிடியில் சிக்கி இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, மத்திய தரைக்கடல் உள்பட அபாயகரமான கடல் வழித்தடங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

2024-இல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 200-ஆக இருந்த நிலையில், 2025-இல் அது 7 ஆயிரத்து 667-ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், இது முன்னேற்றத்தினால் ஏற்பட்ட குறைவு அல்ல என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி ஒதுக்கீடு குறைந்ததால் மீட்புப் பணிகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முடங்கியதே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சங்கீதா, விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மக்கள் திரள்வு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக மக்களின் கருத்துக்களைத் திரட்டி, நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை, பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தேவையற்றது என்றும் வலியுறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களின் கையெழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் திரட்டப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தபால் அட்டைகள் மூலம் தமது எதிர்ப்புக்களையும் கருத்துக்களையும் பதிவு செய்து வழங்கினர்.

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பலி! – காலியில் சோகம்



காலி, பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அனர்த்தம் நேரிட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 25 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரான 29 வயதுடையவரின் சடலத்தைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் யானை அட்டகாசம்! வயோதிபப் பெண் பரிதாப மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானை ஒன்று, மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது.

இந்த யானையின் தாக்குதலில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் வீடுகளில் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீதே யானை தாக்கியுள்ளது.

முனைக்காடு, மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய கதிர்காமத்தம்பி சிவபாக்கியம் என்பவரே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், 44 வயதுடைய அருள்சிவம் கோமதி மற்றும் 62 வயதுடைய ஞானசீலன் அருளம்மா ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பின் எல்லைக் கிராமங்களில் நீண்டகாலமாக அச்சுறுத்தல் விடுத்து வரும் காட்டு யானைகள், தற்போது மட்டக்களப்பு நகர்புறம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.

எனவே, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அச்சுறுத்தி வரும் இந்தக் காட்டு யானைகளின் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்பள உயர்வு கிடைக்கவில்லை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2026 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 200 ரூபா வரவுக் கொடுப்பனவும், தொழில் வழங்குநர்கள் உடன்பட்ட 200 ரூபாவும் சேர்த்து, மொத்தமாக 1,750 ரூபா சம்பளம் கிடைக்கப் பெறாமை தங்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட, தனியார் மற்றும் சிறு தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுடன் ஐபென் நிறுவனம் இணைந்து இணைந்தே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, தொழில் ஆணையாளர் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் மேலதிக செயலாளருக்கும் குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் படி தமக்கு சம்பளம் வழங்கப்படாமைக்கான காரணமாக பின்வரும் விடயங்கள் தங்களது முறைப்பாடுகள் ஊடாக குறிப்பிட்டனர்:

* பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் (கைக்காசு) எனவும்,

* தாம் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்ட கம்பனி தோட்டங்கள் அல்ல எனவும்,

* ஒரு நாளுக்கு 25–30 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் எனவும்,

* 25 கிலோ பறிக்க முடியாதவர்களுக்கு அரை நாள் சம்பளம் (ரூ. 675) மட்டுமே வழங்கப்படும் எனவும்,

* பல தோட்டங்களில் இறப்பர் பால் அளவு 20 லீற்றருக்கு குறைவாகவோ அல்லது 4–5 கிலோவுக்கு குறைவாகவோ இருக்கக் கூடாது எனவும்,

கூறி இதுவரை பெற வேண்டிய சம்பளமும் வழங்கப்படாத நிலை தொடர்ந்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள்:

எமது வாழ்வாதாரம் முழுமையாக தினசரி சம்பளத்திலேயே தங்கியுள்ளதால், எமது உரிமைகள் குறித்து பரிசீலித்து, அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொதுவான சம்பள உயர்வை ஏற்படுத்திக் கொள்ளவும், தற்போது நிர்ணயிக்கப்பட்ட 1,750 ரூபா சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகளாக நிதி அமைச்சு, தொழில் அமைச்சு, நீதி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், தோட்ட மனித மேம்பாட்டு நிதியம் ஆகிய அரச நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

எதிரணியின் கூட்டு அரசியல் சமருக்கு ரணில் முழு ஆதரவு!

“பல கட்சி ஜனநாயக முறைமைக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாம் ஓரணியில் திரள வேண்டும். இது விடயத்தில் எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிரணி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மகா சங்கத்தினருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நாம் எதிர்க்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

குற்றச்சாட்டுகளை சுமத்தி எதிரணியினரை வழக்குகளில் சிக்க வைக்க முற்படுகின்றனர். கட்சிகள் செயல்படுவதை தடுப்பதற்குரிய முயற்சியே இது.

சட்டத்தரணிகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மற்றும் ஜனநாயகத்துக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இதற்காக எதிரணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார் ரணில் விக்கிரமசிங்க.

பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்: கல்வி முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தல்

பதுளை மாவட்டத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக உயர்தர (A/L) வகுப்புகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த முன்னேற்றம் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் “ஒரு புதிய வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை நோக்கி செல்வதாக குறிக்கிறது”.

இந்த வளர்ச்சியில் பண்டாரவளை மத்திய கல்லூரி, பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை, விவேகானந்தா, ராமகிருஷ்ணா மற்றும் பசறை தேசிய பாடசாலை போன்ற பல பாடசாலைகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

திறமையான ஆசிரியர்கள், முறையான கற்பித்தல் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை இணைந்து இந்த முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளன.

எனினும், அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திடீர் ஆசிரியர் இடமாற்றங்கள் இந்த கல்வி வளர்ச்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் பொருளியல் போன்ற பிரதான பாடங்களை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவது மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இப்பாடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கடுமையாகக் குறைந்திருந்த சூழல் நிலவியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்தப் பற்றாக்குறை ஓரளவு சரிசெய்யப்பட்டு, பாடசாலைகளில் கற்பித்தல் முறையாக நடைபெற ஆரம்பித்தது. இந்நிலையில் அனுபவமிக்க ஆசிரியர்களை திடீரென மாற்றுவது மீண்டும் பழைய பின்தங்கிய நிலையை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராகுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இந்த தரணங்களில், மாணவர்களின் முயற்சியும் சமூகத்தின் ஆதரவும் ஒரே நேரத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.” இந்த சந்தர்ப்பத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படுவது கல்வி நெறிமுறைக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், ஒரு ஆசிரியர் மாற்றப்படும் போது உடனடியாக தகுதியான மற்றொருவர் நியமிக்கப்படாதது பாடத்திட்ட முன்னேற்றத்தை முற்றிலும் தடை செய்கிறது.

தற்போது மாவட்டத்தில் 203 தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 35 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் உள்ளன.
இம்மாணவர்களின் எதிர்காலம் கல்வி தரத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. ஆகையால், கல்வி அதிகாரிகள் முறையான திட்டமிடல் மற்றும் தேவையறிதல் இன்றி ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

கல்வி என்பது ஒரு மாவட்டத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளம். அந்த அடித்தளத்தை பலவீனப்படுத்தும் எந்த முடிவும் எதிர்கால தலைமுறையின் வாய்ப்புகளை சுருக்கும்.

எனவே, பதுளை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்காக ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் மறுபரிசீலனை அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
( இரா. சுரேஷ்குமார் -_தெமோதரை நிருபர் )

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார்.

அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
\
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்தவர்.

அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தொடர்ந்து மீண்டும் அக்கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது பலன் அளிக்காத நிலையில் திமுக-வில் இணைந்துள்ளார்.

அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

0
- இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். - புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில்...

ஈரான் உளவுத்துறை தளபதி பலி!

0
ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது. பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல்...

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் மறுப்பு!

0
  தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக...