Home Blog Page 52

நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இலங்கை?

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 கட்டத்தில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (25) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ரசிகர்களின் உற்சாகக் குரலால் அரங்கமே அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒரு தோல்வி ஏற்பட்டால், உலகக்கிண்ண கனவு இத்துடன் முடிவடையும் அபாயம் நிலவுகிறது.

மறுபுறம், நியூசிலாந்து அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளது. இரு அணிகளின் பந்துவீச்சும் துடுப்பாட்டமும் இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இன்றைய ஆட்டத்திலும், அடுத்ததாக நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய மோதல், இலங்கைக்கு சாதாரண போட்டியல்ல — உலகக்கிண்ண பயணத்தை நிர்ணயிக்கும் “வாழ்வா? சாவா?” எனும் தீர்மான தருணமாகவே பார்க்கப்படுகிறது.

லுணுகலை நகர் அன்னை லூர்து ஆலய வருடாந்த திருவிழா

லுணுகலை நகர் – பதுளை மறை மாவட்டத்திற்குட்பட்ட லுணுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை லூர்து ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகுந்த ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் லுணுகலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பெருமளவிலான மறைமாவட்ட விசுவாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய மாலை வேண்டுதல் (Vespers) ஆராதனையை பண்டாரவளை புனித அந்தோணியார் திருத்தலம் வண. அருட்தந்தை ஜகத் பொன்சேகா தலைமையேற்று நடத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கர்மேலைத் திருச்சபை குருமார்களின் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி இனிதே நிறைவேற்றப்பட்டது.

பின்னர் லூர்து அன்னையின் திருஉருவச் சிலை ஏந்திய பவனி லுணுகலை நகரில் நடைபெற்றதுடன், இறுதியில் விசேட ஆசீர்வாதத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.

 

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடரும்!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மண்டைதீவில் அமையவுள்ள இந்த மைதானத்துக்கான கட்டுமானப் பணிகளை, முறையான சுற்றுச்சூழல் அனுமதிச் செயல்முறைகள் பூர்த்தியாகும் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானக் கட்டுமானப் பணியானது நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஒரு பாரிய திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமெனில், அதற்குத் தேவையான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் அவசியமானவை.

எனவே, சம்பந்தப்பட்ட சகல அமைச்சுகளுடனும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி விரைவில் முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு: பெண் கைது!

பண்டாரவளை, பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று தினம் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய பல்லகெட்டுவ பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் சுமார் 12. 40 மணியளவில் வீடொன்றுக்கு அருகாமையில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பலகட்டுவ பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. பின்னர் உடனடியாக ஸ்தானத்துக்கு விரைந்த பல்லகெட்டுவ பொலிஸ் குழுவினர் சிசுவின் சடலத்தை மீட்டதோடு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சந்தேகத்துக்கிடமாக சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த சிசு (17/02 ) அன்று தனக்கே பிறந்ததாகவும் பிறக்கும்போதே இறந்து பிறந்ததினால் தனது வீட்டு முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், சடலத்தை நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் சிசுவின் சடலத்தை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் கழுவும் இடத்தில் தொழில் செய்து வருவதாகவும், குறித்த பெண் ஆங்காங்கே கூலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கு உரிய பெண்ணை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தப்பட உள்ளதாகவும், சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பல்லகெட்டுவ பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பல்லகெட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

தென் மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார்.

அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, 2026 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான உப குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சிங்களக் கல்விப் பிரிவின் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

 

இலங்கைக்கான புதிய மூன்று தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளின் தூதுவர்கள், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்படி,கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, கட்டார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக Tomaž Mencin ஆகியோர் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புதிய தூதுவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜீவனின் கருத்துக்கு சுதந்திர தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வருகை கொடுப்பனவு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட கருத்துக்கு, சுதந்திர தொழிலாளர் சங்கம் தமது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான லெஸ்லி தேவேந்திரா, ஜீவன் தொண்டமானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதம் ஊடாகவே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

12,165 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

இலங்கையில் இவ்வருடத்தில் முதல் இரு மாதங்களுக்குள் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எனவே, கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவருகின்றது.

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 12 ஆயிரத்து 165 டெங்கு நோயாளர்கள் பதிவாகிள்ளனர்.

இரு மாதங்களுக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 37 ஆயிரத்து 216 பேரும், பிரிட்டனில் இருந்து 25 ஆயிரத்து 867 பேரும், ரஷ்யாவில் இருந்து 18 ஆயிரத்து 217 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 751 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஈரான்மீது தாக்குதல் நடத்துவது ஆபத்து: ட்ரம்ப் மறுப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில்,

‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100% தவறானது.

நம் அனைவரையும் போலவே ஜெனரல் கெய்ன் போரை பார்க்க விரும்பவில்லை. ஆனால், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே அவரது கருத்து.

ஈரானின் அணுசக்தி மேம்பாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் ஜெனரல் கெய்ன். எனவே அவருக்கு ஈரானை நன்கு தெரியும்.

ஜெனரல் கெய்ன் ஒரு சிறந்த போராளி. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை வழிநடத்துபவர். அவர் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என கூறவில்லை. அவருக்கு, எப்படி வெற்றி பெறுவது என்ற ஒன்று மட்டுமே தெரியும்.

ஈரானுடனான போர் சாத்தியங்கள் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் தவறானவை, வேண்டும் என்றே எழுதப்பட்டவை. நான்தான் முடிவெடுப்பேன். ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அது நடக்காவிட்டால், அது அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரதிருஷ்டவமான நாளாக இருக்கும். ஈரான் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்கள். இதுபோன்ற ஒன்று அவர்களுக்கு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது’’ என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், வெடிமருந்து பற்றாக்குறை, நட்பு நாடுகளின் ஆதரவு இல்லாதது ஆகியவை அமெரிக்க ராணுவத்துக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஜெனரல் கெய்ன், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...