Home Blog Page 64

சட்டத்தரணி கொலை குறித்து விரிவான விசாரணை!

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி விலகப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள பதவி விலகல் கோரிக்கை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

“சட்டத்தரணி ஒருவரது படுகொலை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய நிலையில், உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியவர்களே இன்று எம் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். எமது ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன. இந்த விசாரணைகளின் முடிவில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது நாட்டுக்குத் தெரியவரும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது அரசின் முதன்மைப் பொறுப்பு. பழைய அரசியல் கலாசாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காகவோ அல்லது அரசியல் இலாபம் தேடும் கோரிக்கைகளுக்காகவோ நான் பதவி விலகப்போவதில்லை.

சட்டத்தரணிகள் உட்பட அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை: பொன்சேகா சுட்டிக்காட்டு!

“தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன. எனினும், தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலும் எதுவும் இல்லை.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை இல்லை. எனினும், கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்பினர், தமக்கு தேவையானவற்றை செய்துகொள்வதற்காக போலி மாயையை உருவாக்க முற்படுகின்றனர்.

முப்படையினர் மற்றும் பொலிஸார் உரிய வகையில் செயல்பட்டுவருகின்றனர். ஏதேனும் இடத்தில் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய இயலுமை அவர்களுக்கு உள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கமும் கரிசனை செலுத்தியுள்ளது என தெரியவருகின்றது. பாதாள குழு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ் நடித்த புதிய வானம் உள்பட சில படங்களை தயாரித்துள்ளார்.

சத்யராஜ், நதியா நடித்த மந்திரப்புன்னகை (1986), ஆனந்த், திவ்யபாரதி நடித்த நிலாபெண்ணே ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் பிப்.14 அன்று காலமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கலில், “எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாரா அர்ஜுன், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியாக ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தமாகி இருக்கிறார். தான் ஒப்பந்தமாகி இருக்கும் பெரிய நடிகர் படம் என்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன்.

தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன், தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ள 2-வது படமாக சிரஞ்சீவி படம் அமைந்துள்ளது. முதல் படமாக ’ஹிட்’ படங்களின் இயக்குநர் சைலேஷ் கோலனு இயக்கத்தில் ரோஷன் நடிக்கும் படம் அமைந்துள்ளது.

பங்களாதேஷ் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா பயணம்!

பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) நாளை, (17) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ டாக்கா செல்லவுள்ளார்.

பங்களாதேஷில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா மற்றும் காலிதா ஷியா ஆகிய இரு பெண் தலைவர்களே மாறி மாறி ஆட்சி செய்து வந்தனர்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் ஒருவர் பிரதமராகப் பதவியேற்கும் முக்கிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.

இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பாக மக்களவைத் தலைவர் (Lok Sabha Speaker) ஓம் பிர்லா கலந்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

இத்தாலி Italy அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

T20 உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலியை இன்று (16) Eden Gardens மைதானத்தில் எதிர்கொண்டது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை அவ்வணி குவித்தது.

பின்னர் 203 என்ற வெற்றி இலக்கை நோக்கி இத்தாலி களம் இறங்கியது.

கத்துக்குட்டி அணியான இத்தாலி சொற்ப ஓட்டங்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சிறப்பாட்டத்தை அவ்வணி வெளிப்படுத்தியது.

20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் இங்கிலாந்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் உயர்மட்ட தூதுக்குழு – ஜனாதிபதி அநுர சந்திப்பு!

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இலங்கை வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை என்பன இலங்கை-பாகிஸ்தான் நட்பை மேலும் வலுப்படுத்துகின்றன

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இலங்கை வருகை என்பன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். டித்வா சூறாவளி உட்பட இலங்கை மக்கள் சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம் பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்த மனமார்ந்த ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.

பாகிஸ்தான் பிரதமருக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் பின்னரே, போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முடிவு செய்ததாக இதன்போது தெரிவித்த அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, அதற்காக பாகிஸ்தான் பிரதமர் சார்பாக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் தமது கிரிக்கெட் அணி உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்ட சிநேகபூர்வமான விருந்தோம்பல் மற்றும் இலங்கை மக்களின் நட்புரீதியான வரவேற்பையும் அமைச்சர் மேலும் பாராட்டினார்.

இலங்கையுடனான உறவுகளை மேலும் வளர்த்து, பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒத்துழைப்புடன் செயற்படுவது பாகிஸ்தானின் நோக்கம் என்றும், அதன்போது இலங்கை வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டியதுடன், குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு, தொழிற் சந்தை மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் தூதுக்குழுவினர் மேலும் குறிப்பிட்டனர்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் Mag.Gen.(R) Faheem UL Aziz, இலங்கைக்கான பாகிஸ்தான் துணை உயர் ஸ்தானிகர் Zunaira Latif, பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி Sumair Ahamad Syed உள்ளிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

O/L பரீட்சை நாளை (17) ஆரம்பம்: பெப்.26 வரை பரீட்சைகள் நடைபெறும்

 

நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்கள்

33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைப்பு

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் : 69,214 தனிப்பட்ட பரீட்சார்த்திகள்: மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்: ஐ,தே.க. வலியுறுத்து!

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

அத்துடன், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய பொறிமுறை அவசியம் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

அமரர் கே. வேலாயுதம் – மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

0
மலையகத் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 76ஆவது ஜனன தினம் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. கல்வி,...

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

0
"அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும...