Home Blog Page 84

டி20 உலகக்கிண்ண தொடர் 7 ஆம் திகதி ஆரம்பம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

“ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரை முன்னிட்டு இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது டி20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“ ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவின் இணை அனுசரணையில் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதிவரை நடைபெறுகின்றது.

இலங்கையில் 20 போட்டிகளை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள அனைத்து அணிகளுக்கும் நன்றிகள். அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.” -என்றார்.

 

ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது!

“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு வாரங்கள் அவகாசம் கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்று முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று FCID
சென்றார்.

இதன்போது FCID வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்தவின் பேச்சாளர் மனோஜ் கமகே,

“ மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பது ஆளுங்கட்சிக்கு தெரியும்.

அதனால்தான் அவரது பாரியாரை இலக்கு வைத்து அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றது போலும். அதுவும் நடக்காது.

ஷிரந்தி கல்விக்கு சேவையாற்றியவர். அது பற்றி பேசப்படுவதில்லை. சிரிலிய கணக்கு பற்றியே பேசப்படுகின்றது.” எனக் குறிப்பிட்டார்.

ஷிரந்தியிடம் FCID விசாரணை! நாமல் CID யில் ஆஜர்!

“ ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார்.

அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார்.
வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போதே மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

“சிரிலிய கணக்கு தொடர்பிலேயே விசாரணை நடக்கின்றது.
முதல் பெண்மணியாக இருந்தபோது அநாதை குழந்தைகளுக்கு அவர் கல்வி வழங்கியவர். இதனை அவர் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவில்லை.

பாலர் பாடசாலைகளையும் ஆரம்பித்தார். இவ்வாறு கல்விக்காக அவர் செய்த சேவை வெளியில் தெரியவரவில்லை. எனினும், உண்மை என்னவென்பது நீதிமன்றம் ஊடாக தெரியவரும்.” – என்றார் மனோ கமகே.

அதேவேளை, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

 

இந்தியாமீதான வரி குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா.
இந்நிலையில், தற்போது பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர். வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர்.

வர்த்தகம், ரஷ்யா – உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.” – என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி விபரம் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்)

பெத்தும் நிஸ்ஸங்க

காமில் மிஷார

குசல் மெண்டிஸ்

குசல் பெரேரா

சரித் அசலன்க

கமிந்து மெண்டிஸ்

ஜனித் லியனகே

பவன் ரத்நாயக்க

துனித் வெல்லாலகே

வனிந்து ஹசரங்க

மஹீஷ் தீக்சன்

துஷ்மன்த சமீர

மதீஷ பத்திரண

ஏஷான் மாலிங்க

தனஞ்ச டி சில்வாவுக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய பவன் ரத்நாயக்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநர், யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் பகுதியில் இருந்து கந்தபளை ஹெதர்செட் நோக்கி பயணித்து கொண்டிருந்த வண்டி திடீரென வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி  கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான கதை உருவாக்கும் படலத்தில் மும்முரமாக இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் இயக்கத்தில் அவரது மகன் யாத்ரா அறிமுகமாக இருக்கிறாரா அல்லது கதையை மட்டும் கொடுத்து வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், யாத்ரா நாயகனாக அறிமுகமாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் யாத்ரா மற்றும் லிங்கா. சில வருடங்களுக்கு முன்பு இருவருமே விவகாரத்து பெற்றாலும், மகன்கள் விஷயத்தில் இருவருமே கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து வருகிறார்கள். இதனால் ரஜினியின் ஆசீர்வாதத்தில் விரைவில் யாத்ரா நாயகனாக அறிமுகமாகும் அறிவிப்பு வெளியாகக் கூடும்.

சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசியல் களத்தில்போன்று வேறு எங்கும் பாரிய சவால்கள் கிடையாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் அல்ல, அனைத்து கட்சிகளுக்குள்ளும் இன்று உள்ளக மோதல் உள்ளது. ஆளுங்கட்சிகூட பிளவுபட்டுதானே உள்ளது.

எனவே, யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். முன்னோக்கி செல்வது பற்றி ஆராய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். நிச்சயம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி என்ற நிலைக்கு கட்சியை கொண்டுவரலாம்.

எனது அரசியல் வாழ்வில் நான் என்றும் அவசரப்பட்டதில்லை. படிப்படியாகவே வளர்ந்துவந்தேன். எனவே, கட்சியை விட்டு சென்ற அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

சிலர் பதவி கேட்கின்றனர். முதலில் கட்சிக்குள் வந்து பிறகு இலக்கை அடைய வேண்டும். எனக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இல்லை.” – என்றார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மக்களிடம் கையளிப்பு!

0
முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில், "கிளீன் ஸ்ரீலங்கா" கருப்பொருளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு”

0
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய...

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு பிரதமர் பணிப்புரை

0
  "Rebuilding Sri Lanka" ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (07) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், "Rebuilding Sri Lanka" திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும்...