Home Blog Page 97

50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது

 25,000 ரூபா கொடுப்பனவு 97% நிறைவு
 பாடசாலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் 73% ஆகும்
 சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சியாளர்களை மீட்டெடுக்க தலா 02 இலட்சம் ரூபா உதவித்தொகை

டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவில் தற்போது 70% வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களில் மொத்தம் 156,805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காகக் கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109,512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாத்தளை மாவட்டத்தில் 1,253 குடும்பங்களில் 1,143 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அது 91% முன்னேற்றம் ஆகும். கண்டி மாவட்டத்தில் 8,409 குடும்பங்களில் 7,083 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அது 84% முன்னேற்றம் ஆகும்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க கணக்கிடப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ரூபா 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் 93% பயனாளிகளுக்கும் உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திற்குப் பின்னர் வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபா உதவித்தொகையை செலுத்துவதில் மொத்த முன்னேற்றம் 97% ஆகும்.

25 மாவட்டங்களில் 435,104 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றிருந்ததுடன், அவற்றில் 422,900 குடும்பங்களுக்கு இதுவரை இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தகுதிபெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதில் 99% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 95%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 88%, மன்னார் மாவட்டத்தில் 94%, வவுனியா மாவட்டத்தில் 99%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 98%, மட்டக்களப்பு மாவட்டத்தில் 98%, திருகோணமலை மாவட்டத்தில் 98%, குருநாகல் மாவட்டத்தில் 98%, புத்தளம் மாவட்டத்தில் 97%, அநுராதபுர மாவட்டத்தில் 98%, பொலன்னறுவை மாவட்டத்தில் 97%, இரத்தினபுரி மாவட்டத்தில் 99% மற்றும் கேகாலை மாவட்டத்தில் 90% ஆகிய பகுதிகளுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகை கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படம் 10,000 ரூபா கொடுப்பனவும் இந்நாட்களில் வழங்கப்படுகிறது.

நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்து 186,893 மாணவர்கள் 15,000 ரூபா உதவித்தொகையைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 136,994 மாணவர்கள் இதுவரை அந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, எஞ்சியுள்ளவர்களுக்கான குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதோடு, அதற்காக அரச பொறிமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6370 தொழில்துறை உரிமையாளர்களின் தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதுடன், ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் தலா 200,000 ரூபா கொடுப்பனவை 5034 விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவதற்காக 1,006,800,000 ரூபா நிதி ஒதுக்கீட்டை மாவட்ட செயலகங்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளது.

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம், கடந்த ஜனவரி 09 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முற்றிலுமாக வீடுகளை இழந்த, மீண்டும் அதே இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிக்க முடியுமான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் 50 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

அதே பகுதியில் மீள்குடியேற்றம் பொருத்தமானதல்ல என்று அறிவுறுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கத் தேவையான காணிகளை அடையாளம் காணும் பணியையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகள் உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகள் நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம், ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பயிர் சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதும் செயற்திறனுடன் தந்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகள் குறித்த சரியான தரவு சேகரிக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டிய இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்வை மீட்டெடுப்பதில், முன்பு இருந்ததை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தும் வகையில் இந்தப் பணிக்ளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி, முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்துடன், இந்நாட்டின் வரலாற்றில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

டி-20 உலக்கிண்ண தொடரிலிருந்து விலகியது பங்களாதேஷ்!

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஆடமாட்டோம் என அறிவித்துவந்த பங்களாதேஷ் அணி, ஐ.சி.சி. டி-20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் சபையின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது.

பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பங்களாதேஷ், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது.

இதையடுத்து 2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.
இந்நிலையில், பங்களாதேஷ் அணி விலகியதால் ஸ்கொட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மொட்டு கட்சி காலியில் வலுவாகவே உள்ளது: ரமேஷ் பத்திரன!

“தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.” – என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை.

சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ரமேஷ் பத்திரன கூறியவை வருமாறு,

“ மீண்டும் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக வாங்கு வங்கி உள்ள மாவட்டம்தான் காலி மாவட்டம். அங்கு சிறப்பான முறையில் பயணம் தொடரும்.

இந்த ஆட்சியின்கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகிவருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாக செயல்பட வேண்டும்.” – என்றார்.

இந்தோனேசியாவில் மண்சரிவு: ஏழு பேர் பலி-82 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் , கிராம பகுதியொன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி எழுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் மேற்கு பண்டுங் West Bandung பகுதியிலுள்ள கிராமமொன்றிலேயே இன்று (24) சனிக்கிழமை இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காணாமல்போயுள்ளவர்களில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மழையுடன்கூடிய வானிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்: விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கவலை!

உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது.

ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது.

உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடு​கள் உறுப்பின​ராக உள்​ளன.

இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது.

சுகா​தா​ரம் தொடர்பான தகவல்​கள், அவற்றை பகிர்ந்து கொள்​ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்​பான எச்​சரிக்கை வெளி​யிடு​தல் போன்ற நடவடிக்​கைகளை உலக சுகா​தார அமைப்​புடன் நிறுத்​திக் கொண்​ட​தாக அமெரிக்க அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

இதன் மூலம் இந்த அமைப்​புடன் அமெரிக்கா​வுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்​துள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த 2024, 2025-ம் ஆண்​டு​களுக்​கான தொகை 130 மில்​லியன் டாலரை அமெரிக்க வழங்க வேண்டியுள்​ளது என்று உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் இந்த முடிவால் உலகள​வில் ஏற்​படும் நோய் பரவல், விஞ்​ஞானிகளின் பங்​களிப்​பு, மருந்து நிறுவனங்​கள் தடுப்​பூசி தயாரிப்​பது போன்ற பணி​கள் கடுமை​யாக பாதிக்​கும் என்று ஜார்ஜ் டவுண் பல்​கலைக்​கழக பொது சுகா​தார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்​டின் கவலை தெரி​வித்​துள்​ளார்.

என்​னுடைய வாழ்நாளி​லேயே மிக பேரழி​வான முடிவை அமெரிக்க ட்ரம்ப் எடுத்​துள்​ளார் என்று லாரன்ஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இத்​தனைக்​கும் உலக சுகா​தார அமைப்பை தொடங்​கும் முயற்​சியை முன்​னெடுத்​தது அமெரிக்​கா​தான். அதே​போல், இந்த அமைப்​புக்கு அதிக நிதி​யுதவி வழங்​கு​வதும் அமெரிக்​கா​தான். ஆண்​டுக்கு சராசரி​யாக 111 மில்​லியன் டாலரை இந்த அமைப்​புக்கு அமெரிக்கா வழங்​கு​கிறது.

அத்​துடன், மருத்​து​வர்​கள், விஞ்​ஞானிகள், சுகா​தா​ரத் துறை பணி​யாளர்​களை​யும் உலக சுகாதார அமைப்​பின் பணி​களுக்கு அமெரிக்கா ஈடு​படுத்​தி​யது. ஆனால், தற்​போது அமெரிக்கா வில​கியது, சர்​வ​தேச அளவில் புதி​தாக நோய் பரவல் ஏற்​பட்​டால் பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தும் என்று கூறுகின்​றனர்.

இதற்​கிடை​யில், கோவிட்​-19 கரோனா தொற்​றின் போது, அமெரிக்கா​வுக்கு முன்​கூட்​டியே சரி​யான தகவல்​களை அளிக்கவில்​லை, சீனா​வுக்கு ஆதர​வாக செயல்​படு​கிறது, தவறான தகவல்​களை வெளி​யிடு​கிறது போன்ற குற்​றச்​சாட்​டு​களை அமெரிக்கா கூறியது குறிப்​பிடத்​தக்​கது.

அமெரிக்​கா​வின் வில​கலால் உலகள​வில் போலியோ ஒழிப்​பு, குழந்​தைகள் உடல்​நலம், புதிய வைரஸ் பரவி​னால் உடனடி​யாக ஆராய்ச்சி மேற்​கொண்டு தடுப்​பூசி தயாரித்​தல் போன்ற பணி​கள் பாதிக்​கப்​படும் என்று நிபுணர்​கள் அஞ்​சுகின்​றனர்.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ​ தனது முடிவை மறு​பரிசீலனை செய்​ய வேண்​டும்​ என்​று வலி​யுறு​த்​தி வருகின்​றனர்​.

ஜனவரி மாத வருமான இலக்கை 22 நாட்களில் தாண்டியது சுங்கம்

2026 ஜனவரி மாத வருமான இலக்கை, இலங்கை சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்திற்கான வருமான இலக்காக, 160.2 பில்லியன் ரூபாவை, இலங்கை சுங்கம் நிர்ணயித்திருந்தது.

இருப்பினும், மாதத்தின் 22 ஆம் நாளுக்குள் 175.4 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டியுள்ளது. இது, சுமார் 9.5% அதிகமாகும்.

டிசம்பரில் பல நாட்கள் வழக்கமான துறைமுக மற்றும் சுங்க நடவடிக்கைகளை பாதித்த சூறாவளியால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் கொள்கலன் வெளியேற்றம் விரைவுபடுத்தப்பட்டது, இந்த வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அதிக இறக்குமதி அளவுகளும் கூடுதல் வருமானத்தில் பங்களித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில், 2,551 பில்லியன் ரூபாவை வசூலித்து, சிறிலங்கா சுங்கம் அதன் வரலாற்றில் அதிகபட்ச ஆண்டு வருமானத்தை பதிவு செய்தது.

இது திருத்தப்பட்ட ஆண்டு இலக்கான 2,241 பில்லியன் ரூபாவைத் தாண்டியது.

2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 1,553 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடும்போது 64.2% அதிகரிப்பாக இருந்தது.

2026 ஆம் ஆண்டில், சுங்கம், 2.2 டிரில்லியன் ரூபாவை ஆண்டு வருமான இலக்காக நிர்ணயித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 13.5% குறைவாகும்.

வாகன இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் குறைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் பங்கேற்ற சஜித்!

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் பங்கேற்ற சஜித்!

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் Matthew Duckworth மற்றும் அவரது பாரியார் Tanya Duckworth ஆகியோரின் கௌரவ அழைப்பை ஏற்றே அவர் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் இங்கு கூடியிருந்தனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு? மக்கள் கூறினால் வீடு செல்லவும் தயார்!

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

“ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் நான் காத்திருக்கின்றேன்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே சுவிஸில் இருந்து அவசரமாக நாடு திரும்பினேன்.” எனவும் குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவேண்டியதில்லை.
பிரதமர் பதவி விலகவேண்டும் என மக்கள் தீர்மானித்தால் வீட்டுக்கு செல்வதற்கு நாம் தயார். நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்பு கூறுவோம்.” – என பிரதமர் மேலும் கூறினார்.

 

 

 

மரக்கறி விலைப்பட்டியல் (24.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (24.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நேட்டோ குறித்து சர்ச்சை கருத்து: ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார் பிரிட்டன் பிரதமர்!

நேட்டோ நாடுகள் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷ்யா கைப்பற்றிவிடும் எனவும் அவர் கூறி வருகிறார்.

மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார்.

டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக மன்ற மாநாட்டில் உரையாற்றி டிரம்ப், நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை என்று கூறினார்.

நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் எமக்கு தேவையுமில்லை. ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பினோம் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அனுப்பினார்கள்…

ஆனால், அவர்களின் படைகள் போர் களத்தில் முன்களத்தில் இல்லை. அமெரிக்க படையினரே முன்களத்தில் இருந்தனர்’ என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி தங்கள் நாட்டையும் அவமதிப்பதாக உள்ளதாகவும், இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரிட்டனர் பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை கடந்த 2001ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் நேட்டோ அமைப்பில் இருந்த பல்வேறு நாடுகள் பங்கேற்றன.

இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். இந்த போரில் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 457 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

ஈரான்மீது பாரிய ராணுவத் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ஈரானுடனான ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றப்படும்வரை அமெரிக்கப் படைகள் அப்பகுதியிலேயே நிலைநிறுத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த உடன்படிக்கையை மீறினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் தனது...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்

0
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது...

கடைசி வரை நீடித்த பரபரப்பு: டெல்லியை வீழ்த்தியது குஜராத்!

0
ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு...