நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜுலை மாதத்துக்குரிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
எனவே, 21 ஆம் திகதி கையளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்வாரத்துக்குள் நிச்சயம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீர் கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை மையப்படுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
அவசர விடயமாக கருதி இதனை விரைவாக சபாநாயகர் விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
