நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான, முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










