2026.08.11 இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில், மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனமல்வில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ்ஸில் 15 பயணிகள்வரை பயணித்திருந்தாலும் அதிஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான பேருந்தின் பதிவு இலக்கம் NA 1097 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
த.டிமேஷன்

