10 ஆவது நாளாக தொடரும் போர்: புதிய உச்ச தலைவரை நியமித்தது ஈரான்!

ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, அங்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின் மகன் மொஸ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles