லொறி மோதி இளைஞர் பலி!நாவலப்பிட்டியில் சோகம்

கண்டி, நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சிறப்பு அங்காடி கிளை ஒன்றில் பொருள்கள் இறக்க முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில், லொறியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடிக்கு உணவுப் பொருள்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று, நேற்றுக் காலை பொருள்களை இறக்குவதற்காகப் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

இதன்போது, லொறியின் பின்புறத்துக்கும் அங்கிருந்த களஞ்சியசாலைச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் எதிர்பாராத விதமாகச் சிக்குண்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த 24 வயதுடைய இளைஞர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதியை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அபார வெற்றி!

Related Articles

Latest Articles