அரசியல் ஜாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தேசியப் பட்டியலில் வருவது ஏன்?

அரசியலில் ஜம்பவான்கள் என கூறிய அரசியல்வாதிகள் இம்முறை பொதுத் தேர்லில் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.
நேற்று (2020.07.19) மாலை மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் தங்கள் வளர்ச்சியை மாத்திரம் கருத்திற் கொள்வதனால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்களின் வாக்குகள் ஒரு போதும் கிடைக்காதென்பதனை அரசியல்வாதிகள் அறிந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அமைத்து உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மொட்டு கட்சியால் முடிந்தது.
புதிய கட்சி ஒன்று உருவாக்கினால் ராஜபக்சக்கள் நடுவீதிக்கு செல்ல நேரிடும் என கூறியவர்களை இணைத்துக் கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட காரணம், நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு சென்று பொருளாதாரத்தை மேற்கொண்டு புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். நாட்டின் அரசியலை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக புதிய சக்தி ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக புதிய தொழிற்சாலைகளை  உருவாக்குதல், விவசாயம் உட்பட பயிர்செய்கைகளை வளர்ச்சியடைய செய்தல், தொழில்நுட்ப கல்வி ஊடாக தொழில்களை உருவாக்குதல் உட்பட பொறுப்புடன் நாட்டை வளர்ச்சியடைய செய்யும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக  இதன் போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles