பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் பொருத்தப்படும். முதற்கட்டமாக இரு மாதங்களுக்குள் 40 பஸ்களில் இதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் – என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” இலங்கையில் பொதுபோக்குவரத்து சேவையென்பது திருப்தியடையக்கூடிய நிலையில் இல்லை. ரயில், அரச மற்றும் தனியார் பஸ்களிலும் உரிய சேவை வழங்கப்படவில்லை. எனவே, நடைமுறைக்கு சாத்தியமான – கொள்கை ரீதியிலான சில முடிவுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
வீதி பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. இவ்விகாரம் தொடர்பான 85 வேலைத்திட்டங்கள் அமுலுக்குவரவுள்ளன. அவை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். ஜுலை முதலாம் திகதி முதல் திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
40 பஸ்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் ஏ.ஐ. தொழில்நுட்பம் பொருத்தப்படும். சாரதிகளை விழிப்பாக வைத்திருக்கும் வகையிலேயே இபோச மற்றும் தனியார் பஸ்களில் இவை பொருத்தப்படவுள்ளன. அதன்பின்னர் ஏனைய பஸ்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும்.” – என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.