“எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவுக்கு வரவேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க வேண்டும்.”
இவ்வாறு மொட்டு கட்சியிலிருந்து வெளியேறி, டலஸ் அணியுடன் சங்கமித்துள்ள பேராசிரியர் சரித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேர்தலை ஒத்திவைத்து, மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்த ஆட்சியாளர்கள் படுதோல்வி அடைந்ததே இந்நாட்டு வரலாறு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிகளுக்கே மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர்.
தற்போதைய அரசு தேர்தலை நடத்தாது என்றே எண்ண தோன்றுகிறது. எனவே, எதிரணிகள் தம்மிடையிலான விமர்சனங்களை விடுத்து, ஜனநாயகத்தை பாதுகாக்க பரந்தப்பட்ட கூட்டணியாக ஒன்றுபட வேண்டும்.” – என்றும் சரித ஹேரத் கூறினார்.
