வவுனியா,பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச் சென்றுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
