கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பலி – நுவரெலியாவில் சோகம்!

வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக்கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.

நுவரெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய் , இரு மகள்மார் மற்றும் மகன் என நால்வர் வசித்து வருகின்றனர்.

தனது கணவன் இறந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தாய் பிள்ளைகளைப் படிக்கவைத்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகள் பல்கலைக்கழக படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழமைபோல சிறுவன் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார்.

தாய் தனக்குத் தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் பகல் ஒரு மணியளவில் மரத்தில் விளையாடிய சிறுவன் கழுத்தில் கயறு இறுகி துடிக்கிறான் காப்பாற்றுங்கள் எனச் சம்பவத்தை அவதானித்த அருகிலிருந்த வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து மரத்துக்கு அருகில் ஓடியவர்கள் சிறுவனை மீட்டபோதிலும் சிறுவன் மயக்கத்தில் இருப்பதாக உணர்ந்து 1990 அவசர அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் அவசர அம்புயூலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்த வைத்தியர்கள் சிறுவனைப் பரிசோதித்த போது சிறுவன் உயிர் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles