கெசல்கமுவ ஓயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இணையும் இடத்தில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (17) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ச்சர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் ராக்கம்மா (வயது 82) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது மகள் அடையாளம் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் கடந்த 10 நாட்களாக வீட்டிலிருந்து காணாமல் போய்வுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிக்கோயா மரண விசாரணை அதிகாரி ரவிகுமார் சம்பவ இடத்திலேயே பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்
