கொழும்பிலிருந்து பதுளையை நோக்கிவந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று வீடொன்றின் மீது மோதிவிபத்துக்குள்ளாகியதில், பயணிகள் ஐவர் கடுங் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இவ் விபத்து, இன்று காலை, ஹல்துமுள்ளை நகரில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் கடுங்காயங்களுக்குள்ளானவர்களில் நான்குபேர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையிலும், மற்றவர் ஹல்துமுள்ளை அரசினர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
காயமுற்றஐவரும்,விபத்துக்குள்ளான பஸ்சில் பயணித்தவர்களாவர். பஸ் மோதி யவீட்டில் எவரும் இல்லாதலால்,எவருக்கும் காயம் ஏற்படாதபோதிலும் ,குறிப்பிட்டவீட்டிற்கு பலத்தசேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பஸ்ஸின் வேகம் கட்டுப்படுத்தப்படாதலாலேயே, இவ் விபத்து இடம்பெற்றதாக,விசாரணைகளைமேற்கொண்டபொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை