சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 300 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 15 வீடுகள் சேதம்!

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 300 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 15 வீடுகள் பகுதிளயவு சேதமடைந்துள்ளன.

சுமார் 52 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினமும் கடும் மழை பெய்துவருகின்றது.

Related Articles

Latest Articles