‘சோளப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா வளர்த்த சூத்திரதாரி கைது’

மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டமாறுவயில் சோள பயிர்களுக்கு மத்தியில் வளர்க்கப்பட்ட இரண்டு கஞ்சா செடிகளை மடூல்சீமை பொலிஸார் கைப்பற்றியதோடு ஐம்பது வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மடூல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து SI பியந்த தலைமையிலான குழுவினர் ஸ்தானத்திற்கு விரைந்து சோளம் பயிர் செய்யப்பட்டிருந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது மூன்றரை அடி உயரமான இரண்டு கஞ்சா செடிகளை மீட்டு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

செய்தி ராமு தனராஜா

Related Articles

Latest Articles