ஜனாதிபதி கோட்டாவின் இரு கதாபாத்திரங்களும் ‘பெயில்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இரண்டு கதாபாத்திரங்களுமே ‘பெயில்’ – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தனக்கு இரு முகங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் இந்த இரு கதாபாத்திரங்களையும் அடையாளம் காண்பது தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. நல்ல பக்கம் எது, கெட்ட பக்கம் எது என்பது தெரியாமல் உள்ளது. என்னை பொருத்தவரையில் இரு காதபாத்திரங்களுமே பெயில் என்றுதான் கூறுவேன்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் தொடர்பில் ஒரு கார்ட்டூனைக்கூட வரையும் சுதந்திரம் இருக்கவில்லை. அரசாங்கத்தை விமர்சித்த சில ஊடகவியலாளர்களுக்கு இவ்வுலகைவிட்டே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால்தான் 2015 இல் அவர்களுக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போதும் எதிரணியை மிரட்டி, அச்சுறுத்தல்விடுத்து – மௌனிக்க வைத்து பழைய யுகத்துக்கு செல்வதற்கு முயற்சிக்கின்றனர். “ – என்றார்.

அதேவேளை, ஜனாதிபதியின் அறிவிப்பை திரிவுப்படுத்தி எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிடுவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தயாப்பா பண்டார தெரிவித்தார்.

Related Articles

Latest Articles