ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு – ரணிலை ஆதரிக்க மொட்டு கட்சி முடிவு!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே மொட்டு கட்சியின் நிலைப்பாடு வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles