டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் 6 ஆயிரத்து 497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மாவட்டத்தில் 218 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 172 பேரும்,  கம்பஹா மாவட்டத்தில் 130 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles