“தமிழக நிவாரணதில் வீட்டுக்கு ஒரு பொதி”

தமிழக அரசு வழங்கியுள்ள உணவு நிவாரணப் பொதிகளை பெருந்தோட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் போது வீட்டுக்கு ஒரு பொது என்ற அடிப்படையில் வழங்கப்படும் என நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரண பொருட்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படும் என்பது தொடர்பாக இதுவரை தெளிவான விளக்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பலர் எம்மோடு தொடர்பு கொண்டு இது சம்பந்தமான விளக்கங்களை கோருகின்றனர்.

இவ்விடயம் சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட விடம் விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்த போது அவர் மேற்கண்ட விளக்கங்களை தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் வசிக்கின்ற மக்களின் சகல வீடுகளுக்கும் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இங்கு தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தகவல் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. அத்தகவல் பிழையானது என மாவட்ட செயலாளர் தெரிவித்ததுடன் தோட்டங்களில் வசிக்கின்ற சகல குடும்பங்களுக்கும் இந்த நிவாரண பொதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாவட்டத்தில் நகர கிராம புறங்களில் பொருள் விநியோகத்தின் போது சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் மட்டுமல்லாமல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. எனவும் நுவரெலிய மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன் கலபொ ட தன்னிடம் தெரிவித்ததாக கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles