” சிறுவயதில் நாம் கிரிக்கெட் விளையாடும்போது, தோல்வி ஏற்படும் என தெரிந்துவிட்டால் சிலர் பந்தை ஒளித்துவிடுவார்கள். அது சிறுவர் பராயம்.
இதுபோல்தான் உள்ளாட்சிசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசு முற்படுகின்றது. வாக்கு சீட்டு அச்சிட காசு இல்லை உட்பட சிறுபிள்ளை தனமாக காரணங்கள் கூறப்படுகின்றன.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.










