தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின நிகழ்வு நாளை ஹட்டனில்

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் மகளிர் தின நிகழ்வு நாளை ஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற உள்ளது.

சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரதின் ஆலோசனையில் மகளிர் அணி தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வும் ஆரம்பமாகும்.

இந்த நிகழ்வில் சங்கத்தின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப் முன்னாள், மாகாண சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், மாதர் சங்க தலைவிகள், தோட்ட தலைவிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

Related Articles

Latest Articles