‘தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்’

ஆயிரம் ரூபாவில் வாழ்க்கை நடத்த முடியாது. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,500 ரூபா வழங்கபட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க இன்னும் முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வரவு செலவு வாசிப்பின் போது ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் முன்வாராது என்று எனக்கு நன்றாக தெரியும்.

அரசாங்கம் முன்மொழிந்ததை போல் ஆயிரம் ரூபா மாத்திரம் அல்ல இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்து சமுர்த்தி கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.

ஆகையால், அரசாங்கம் இதற்கான முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறார்கள்.அப்படி என்றால் அரசாங்கத்திற்கு அதற்கான நிதியினை வழங்கி அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும்.

இது போன்ற நடடிவடிக்கையினை அரசாங்கம் ஒரு போதும் செய்யாது. இவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்வார்கள். ஆயிரம் ரூபா தருவதாக கூறுகிறார்கள், வீடு தருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஒன்றுமே நடைமுறைக்கு வருவதில்லை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles