நாட்டில் மேலும் 492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 841 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 54 ஆயிரத்து 551 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
