நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஜனாதிபதி கூறுவது என்ன?

மாவீரர் நினைவேந்தலுக்கு தற்போதைய அரசாங்கமே இடமளித்துள்ளது என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. 2011 ஆம் ஆண்டு முதல் நினைவேந்தலுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்பட இடமளிக்கமாட்டோம். இது விடயத்தில் உறுதியான கொள்கையில் அரசு உள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.

இலத்திரனியல் ஊடக பிரதானிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2011 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நினைவேந்தலுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய அரசாங்கத்தால் புதிதாக வழங்கப்பட்ட அனுமதி அல்ல இது. புலிக்கொடி உட்பட அவ்வமைப்புக்குரிய சின்னங்களை, அடையாளங்களை பயன்படுத்த முடியாது எனவும் வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 121 இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்துள்ளன. 50 ஆயிரத்து 52 பேர் அதில் பங்கேற்றுள்ளனர். 2023 இல் 159 இடங்களில் நடந்துள்ளன. 64 ஆயிரத்து 266 பேர் பங்கேற்றுள்ளனர் என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் 144 இடங்களில் நினைவேந்தல்கள் நடந்துள்ளன. 45 ஆயிரத்து 778 பேர் பங்கேற்றுள்ளனர்.நிலைமை இவ்வாறிருக்க தற்போதுதான் என்றுமில்லாதவாறு இப்படி நடக்கின்றது என செய்திகள் வெளியிடப்படுகின்றன. 2011 இல் இருந்து இது நடந்துள்ளது. எனவே, இந்த ஆட்சியின்கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவது பொய்யாகும்.

இந்நாட்டில் இனி இல்லை என்றளவுக்கு இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. எமது பரம்பரையினர் வடக்கிலும், தெற்கிலும் போரில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. எனவே, மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்ககூடாது. இது விடயத்தில் நாம் உறுதியாகவே உள்ளோம். ஜனநாயக ரீதியில் நாம் அரசியல் செய்யலாம். எனினும், இனவாத, மதவாத அரசியலுக்கு இடமில்லை. இனவாதம் தலைதூக்க இடமளியோம்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles