பிரான்ஸ் நாட்டின் ‘பொன்மனி’ அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் முத்துக்குமாரின் நிதி அனுசரணையில், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இதன் முதற்கட்டமாக பின்வரும் பாடசாலைகளுக்கு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன:
ரொப்கில் தமிழ் வித்தியாலயம்
சிங்காரவத்தை தமிழ் வித்தியாலயம்
போனோகோட் தமிழ் வித்தியாலயம்
கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 02 தமிழ் வித்தியாலயம்
கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 01 தமிழ் வித்தியாலயம்
டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம்
இந்நிகழ்வில் பொன்மனி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்களான கணேசன் இளையராஜா, எஸ். சதீஸ்குமார், சிவக்குமார் சசிகுமார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்










