” மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய சட்டம்”

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தவறான கோணத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தொழிற்சங்க தடை, ஊடக அடக்குமுறை என்றெல்லாம் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் இதனை செய்யலாம். அதற்கு புதிய சட்டம் அவசியம் இல்லை.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்படுகின்றது.” – என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles