‘மடுல்சீமை சம்பவம் – தோட்ட உதவி முகாமையாளர் இடமாற்றம்’

மடுல்சீமையில் தோட்டக்கள உத்தியோகத்தரை தாக்கிய தோட்ட உதவி முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் கைவிடப்படவுள்ளது. நாளை முதல் தொழிலாளர்கள் தொழிலுக்கு திரும்பவுள்ளனர்.

தோட்டகள உத்தியோகத்தரை, தோட்ட உதவி முகாமையாளர் தாக்கியதை கண்டித்து தோட்ட தொழிலாளர்களும், தோட்ட சேவையாளர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.  மடுல்சீமை பகுதியின் அமுனுதோவ பெருந்தோட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

இப் பணிபகிஸ்கரிப்பில் 500 தொழிலாளர்களும் 75 தோட்ட சேவையாளர்களும் ஈடுப்பட்டு இருந்தனர்.

தோட்ட உதவி நிருவாகினால் தாக்கப்பட்ட தோட்ட களஉத்தியோகத்தரான செல்வகுமார் கலைராஜ் என்ற ,இளைஞன் மெடிக்காதென்ன அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தோட்டத்தின் உண்மை நிலையினை தோட்ட முகாமையாளருக்கு தோட்ட கள உத்தியோகத்தர் தௌிவு படுத்தி உள்ளார். இதனை ஜீரனிக்க முடியாத தோட்ட உதவி நிருவாகி தோட்ட கள உத்தியோகத்தரை பலமாக பல முறை தாக்கியுள்ளார். கடமைநேரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தோட்ட முகாமையாளர்,  தோட்டத்திற்க்கு பொறுப்பான மடுல்சீமை பிளான்டேசன் நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து தோட்ட உதவி நிருவாகியை 20 நாட்களுக்கு இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பணிபகிஸ்கரிப்பு நாளை முதல் கைவிடப்பட்டு கடமைகள் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் என்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles