மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதே வடக்கு மக்களுக்கு இந்தியா வழங்கும் பேருதவியாக அமையும்!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கு அவர்கள் வழங்கும் பெரும் சேவையாகவும், பேருதவியாகவும் அமையும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டபோது அதனை தடுப்பதற்கு பாரிய பிரசாரங்களை ஆஸ்திரேலியா மேற்கொண்டது. சட்டமாக இருக்கட்டும், பிரச்சாரமாக இருக்கட்டும் உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

போர்காலத்தில் வடக்கு மக்கள் இந்தியா சென்றார்கள். இந்தியா அவர்களை பாதுகாத்தது. இதனை மதிக்கின்றோம். வடக்கில் தற்போது கடற்றொழில்தான் பிரதானமாக உள்ளது. எனவே, அதனை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்காமல்இருப்பதே வடக்கு மக்களுக்கு ஆற்றும் பெரும் சேவையென்பதை இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் கூறிக்கொள்கின்றேன்.

இந்தியாவில் உள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தலாம். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுத்து, வடக்கு மீனவர்களின் கடற்றொழிலை பாதுகாப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கான பெரும் உதவியாக அமையும்.

இந்தியாவால் இதனை செய்ய முடியும். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கினாலும் வடக்கு மக்களுக்காக இதனை செய்ய வேண்டும். அப்போதே அந்த உதவிகளில் உண்மை தன்மை இருக்கும்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles