முழு நாட்டையும் உலுக்கிய பெரியநீலாவணை இரட்டைக்கொலை: நடந்தது என்ன?

கட்டுரை – பாறுக் ஷிஹான்

தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்வதற்கு முற்பட்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணை யங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மைச் செய்திகளாக வலம் வந்து கொண்டு இருக் கின்றன.

தனது இரு வலது குறைந்த பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்த நிலையில் மனைவியின் இழப்பு தன்னை வெகுவாகப் பாதித்திருந்தது எனவும், இதனால் தனது பிள்ளை களைப் பராமரிப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தால் தான் இவ்வாறு செயற்பட்டார் எனவும் தனது வாக்கு மூலத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜூம்மா வீதியை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது மிர்சா முகமது கலீல் தெரிவித்திருக்கின்றார்.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜூம்மா வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுக் காலை 8 மணியளவில் குறித்த இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ள நிலையில் தகவல்கள் வெளியாகி அதிகளவான மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி இருந்தனர்.

அங்கு நடந்தது என்ன?

குறித்த வீட்டில் மனைவியின் இழப்பின் பின்னர் தனது இரு இரு வலது குறைந்த பிள்ளைகளையும் பராமரித்து வந்த தந்தையான 63 வயது மதிக்கத் தக்க முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவருக்கு வாழ்க்கையில் விரக்தி வந்திருக்கும் நிலை அவரது அண்மைக் கால செயற்பாட்டில் உணர முடிகின்றது. அதாவது தனது மனைவியின் நோய் கால கட்டத்தில் அவரைப் பராமரிக்க மற்றும் வைத்தியசாலைக்கு அழைத் துச் செல்வதற்கு ஒரு சிற்றூர்தியை கொள்வனவு செய்திருந்தார். இந்தச் சிற்றூர்தியை சம்பவ தினத் திற்கு முன்னர் மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்திருந்ததாகவும் மறுமணம் செய்வதற்கு ஆர்வமாக அவர் இருந்த போதிலும் தனது இரு மனநலன் குன்றிய பிள்ளைகளைச் சுட்டிக்காட்டி தடைப்பட்டதாகவும் அமைதியான மென்மையான போக்குள்ள அமைதியான ஒரு மனிதன் என அப் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனைவிட தந்தையினால் கொல்லப்பட்ட இரு பிள்ளைகளும் அப்பகுதியில் உள்ள வலது குறைந்த பிள்ளைகளை அனுமதிக்கும் ஹியூமன் லிங்க் பாடசாலைக்கு கல்வி கற்பதற்கு அனு மதித்திருந்தார். இருந்தபோதிலும் அவரது மனைவியின் இறப்பின் பின்னர் அப்பிள்ளைகளை அப்பாடசா லைக்கு அனுப்புவதை இடைநிறுத்திக் கொண்டார் என்ற மற்றுமொரு தகவலும் வெளியாகி இருந்தது.

மேலும் 6 பேர் இக்குடும்பத்தில் படுகொலை செய்யப்பட்ட இரு வலது குறைந்த பிள்ளைகளைத் தவிர வெளிநாடுகளில் தொழில் புரிந்த ஏனைய இரு பிள்ளைகளும் அண்மை யில் மரணமடைந்த தாயின் மரணச் சடங்கில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து கலந்துகொண்ட கதையும் விசாரணையில் வெளியாகி இருந்தது.

இவ்வாறான நிலையில் 29 வயது மதிக்கத்தக்க முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் தினமும் அருகில் உள்ள மருத முனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா மஸ்ஜிதில் தனது ஐவேளை தொழுகையையும் விடாமல் செய்து இறைபணியை முன்னெடுத்தவர் என்பதுடன் வலது குறைந்த இயக்கத்தைக் கூட மறந்து வழமையாக ஏனைய மக்களோடு இணைந்து செயற்படுபவர் எனவும் மக்கள் ஊடகங்களிடம் குறிப் பிட்டனர்.

இரட்டைக்கொலை எவ்வாறு நடைபெற்றது?

குறித்த வீட்டில் இருந்த இரு பிள்ளைகளும் படுக்கையில் வைத்தபடி பலவகை கத்தி வகைகளைக் கொண்டு திடீரென கழுத்தால் வெட்டிய தந்தை சம்பவத்தைக் கைத்தொலைபேசி ஊடாக தனது சகோதர – சகோதரிகளுக்கு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சம்பவ வீட்டிற்கு உடனடியாக வந்த சகோதர – சகோதரிகள் அங்கு கண்ட காட்சியைக் கண்டு அபயக்குரல் எழுப்பியதுடன் இரத்தக்காயங்களுடன் கத்தியோடு காணப்பட்ட தனது சகோதரனை அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலைக்குப் பொது மக்களின் உதவியுடன் அழைத்துச் சென்றனர். பின்னர் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்துடன் காணப்பட்ட முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோரின் நிலை கண்டு அவ்விடத்தில் வந்திருந்த உறவினர்கள் மக்கள் தங்களை அறியாமல் இந்த நோன்பு (ரமழான்) மாதத்தில் இவ்வாறு நடந்து விட்டதே என கதறி அழுது பெரிய நீலாவணை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸாரின் நடவடிக்கை சம்பவம் தொடர்பில் பெரியநீலா வணை பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ். கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலி ஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசா ரணைகளை முன்னெடுத்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலங்கள் காணப்பட்ட வீட்டுக்கு உரிய பாதுகாப்பை வழங்கினர்.

தடயவியல் பொலிஸாரும் மோப்ப நாய் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது. பின்னர் கல்முனை நீதிமன்ற நீதி வான் எம்.எஸ்.எம் சம்சுதீன் அங்கு வருகை தந்து விசாரணைகளை மேற் கொண்டு இறுதியாக பிரேத பரிசோ தனைக்காக அம்பாறை பொது வைத் தியசாலை அனுப்பி வைக்கப்பட்டு பின் னர் இரவு உறவினர்களிடம் இரு சட லங்களும் கையளிக்கப்பட்டன. சடலங்கள் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், வெளி நாட்டில் இருந்து இரு சகோதரர்களின் வருகைக்காக காத்திருப்பதாக உற வினர்கள் நேற்றிரவு தெரிவித்தனர்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles