லிந்துலையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – இருவர் காயம்!

ஹட்டன் –  நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேனொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சாரதியும், அதில் பயணித்த ஒருவருமே காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா பகுதியிலுள்ள வாகனம் திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை , மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் வழியிலேயே வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles