விமான கட்டுப்பாட்டாளர் பதவிக்கு 50 பேரை நியமிக்க தீர்மானம்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் இரத்மலானை சிவில் விமானப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles