சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் பயிற்சிப் பெற்று வரும் டோனி, இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில்,
“உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்.” என பகிர்ந்துள்ளார்.